எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் கால அட்டவணை மாற்றப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கால அட்டவணை மாற்றம் குறித்து விரைவில் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக