செவ்வாய், 30 ஜூன், 2015

சிகிரியா ஓவியத்தில் பெயர் எழுதி சிறைக்கு சென்ற யுவதிக்கு வேலை வாய்ப்பு!

(சித்தாண்டி நித்தி)

  சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய யுவதிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பினை வழங்க அவரின் சுயவிபரக்கோவையினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பெற்றுக்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சபைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 14.02.2015 அன்று சித்தாண்டி, விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து கடந்த மாதம் விடுதலையாகியிருந்தார்.இந்த நிலையில் குறித்த யுவதிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அரச துறையில் தொழில் வாய்ப்பினை வழங்க இன்று உதயசிறியிடம் இருந்து சுயவிபரக்கோவையைப் பெற்றுக்கொண்டார்.


குறிப்பிட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் ராஜேஸ்வரன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate