மட்டு வாகரை புளியங்கன்றடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் ஆரம்ப நாளாகிய ,ன்று சனிக்கிழமை (27) பாற்குடப் பவணியும் 108 சங்காபிஷேகமும் வாகரை செல்வ விநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ சொ.ரதன் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று நடைபெற்ற பாற்குட பவணி நிகழ்வானது புளியங்கண்டலடி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஆலயத்திற்கு வந்தடைந்தது கோம பூசை நடைபெற்றதும் பிரதான கும்பம் மற்றும் 108 சங்காபிஷேகமும் நடைபெற்று விசேட பூசைகள் நடைபெற்றது.
அன்னை முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் உற்சவ காலங்களில் ஆலயத்தில் விசேட திருவிழாக்கள் இடப்பெறவுள்ளதுடன் எதிர்வரும் விழயாக்கிழமை (02) அதிகாலை விசேட பூசை இடம்பெற்றதும் கன்னிமார் பூசை, திருக்குளிர்த்தி அதனைத்தொடர்ந்து கும்பம் சொறிதல் போன்றவற்றுடன் இவ்வாண்டிற்க்கான அன்னையின் உற்சவ காலம் நிறைவடையவுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக