ஞாயிறு, 21 ஜூன், 2015

வந்தாறுமூலை விஷ்ணு ஆலயத்தில் நாகர் கல்வெட்டு சாசனங்கள் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாகர் கல்வெட்டு சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், வரலாற்றுத்துறைசார் பேராசிரியரும் யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதனுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பேராசிரியர் கல்வெட்டினை ஆய்வு செய்து பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்தினார். ஆலய முன்றலில் காணப்பட்ட 5அடி 8அங்குலம் உடைய அரை வட்டக் கருங்கல்லை ஆய்வு செய்தபோது அதில் கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் பிராமிக் வரிவடிவம் காணப்பட்டது. குறித்த கல்லில் குறிப்பிடப்படும் விடயமானது மணிநாகன் பள்ளி வேள்கண்ணன் என எழுதப்பட்டுள்ளது. 

மணிநாகன் என்பது நாகர்களது வழிபாட்டு தெய்வமாகிய நாகதேவனை குறிப்பதாகும், மணிநாகன் பள்ளி என்பது நாகர்களது வழிபாட்டு தலம் என்பதாகும். மணிநாகன் பள்ளி வேள் கண்ணன் என்பது வேள் கண்ணன் எனும் நாகமன்னனால் அமைக்கப்பட்ட ஆலயம் என்பதாகும். வேள்கண்ணன் என்பது நாகரசனின் நாமம் ஆகும். வேள் என்பது அரசர்களுககு வழங்கும் சிறப்பு பட்டமாகும். 

இங்கு காணப்படும் அரைவட்ட கருங்கல்லானது நாகர்களது வழிபாட்டு தலத்துக்கு முன்பாக வைக்கப்படுவதாகும். இதில் அதிகளவில் நாக பந்தங்களின் உருவம் காணப்படுகின்றது. இதேவேளை, கடந்த மாதங்களில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட கிடக்குழி, கல்லடிச்சேனை வேரம், பாலாமடு, பலாச்சோலை வில்லுத்தோட்டம், பாச்சேத்துக்குடா போன்ற இடங்களில் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியரும் யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன், மேற்கொண்ட ஆய்வுகளில் பல்வேறுபட்ட நாகர் கால சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624967

Translate