யோகம் பிறந்தது பாரத மண்ணில் என்றாலும் அந்த மண்ணில் இருந்து வந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் வாழக் கூடிய பூமியில் முக்கியமானது இலங்கை பூமி. அத்துடன் தெய்வ சக்திகள் ஒருங்கிணைந்து புதைந்திருக்கக் கூடிய இடமாகவும் இப்பூமி விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது இந்த பூமியில் ஆன்மீக தாகம் மிக்கவர்கள் அதிகம் இருக்கின்றார்கள். என யோகி கைலாஷ்நாத் தெரிவிக்கின்றார்.
யோகி கைலாஷ்நாத், சித்தர் களஞ்சியம், சித்தர் புராணம், மனம், மாண்புகளும் மாறுபாடுகளும், சத்குரு நாத யோகம், ஆள்மனம் என்னும் அதித மனம் (மெஸ்மெரிச, ஹிப்நாடிச பயிற்சிமுறைகள்) கற்பூரதேகம் உள்ளிட்ட பல்வேறு நூல்களையுமு எழுதி வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பேரின்பஞான பீடாதிபதி சத்குரு மகாபுருசர் எஸ்.புண்ணியரத்தினம் சுவாமிகளின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த யோகி கைலாஷ்நாத் இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று பார்வையிட்டார்.
யோகி கைலாஷ்நாத்தின் வருகையையொட்டி, களுவாஞ்சிக்குடியிலுள்ள ஸ்ரீ யோக ஞர்னபீடம், காரைதீவிலுள்ள ஆச்சிரமம், மண்டூரிலுள்ள ஸ்ரீ ஆத்மஞானபீடம், தாண்டியடி ஆச்சிரமம் ஆகியவற்றில் விசேட யாகபுங்களும் அருள் உபதேசங்களும் நடைபெற்றன.
இலங்கையில் 15 நாட்கள் தங்கியிருந்த யோகி கைலாஷ்நாத் உடன் நமது வாசகர்களுக்காக கலந்துரையாடினோம்.
அவரது கலந்துரையாடலின் முழு வடிவம்,
உங்களின் ஆண்மீகப் பயணம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது…?

அங்கு எனது உயர் அதிகாரி என்னை இமயமலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு என் குருநாதராகிய சிவானந்தா ஜி மகராஜ் அவர்களின் ஆச்சிரமத்தில் தங்கியிருந்து. அந்த சிவானந்தா ஆச்சிரமத்தில் கால்நடையாக யாத்திரையாக சார்தாம் யாத்திரை என்று சொல்லப்படக் கூடிய கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதாரநாத் செல்லும் போது நிறைய மகான்களை சந்திக்க நேரிட்டது.
அப்போது எனக்கு இந்த வாழ்க்கை பிடித்துப் போக லௌகீக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அங்கு சென்று பாடம் கற்றுக்கொள்ளும் சூழ்நிலை இருந்தது. அங்கிருந்து 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்து யோகா கலை பணி புரிந்து விட்டு இன்று எங்களுடைய மாணவர்களே எமக்கு அமைத்துக் கொடுத்த ஆச்சிரமத்தில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றேன்.
எனது கல்லுரியில் 12 ஆண்டுகள் கற்பித்துள்ளேன். அங்கு என்னிடத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் மென்பொருள் கம்பனிகளில் வல்லுனர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் நான்கு ஐந்து பேர் இந்த நிதியத்தை நடத்தி வருகின்றார்கள். அவர்களின் நோக்கம் எனது பணி குறிப்பிட்ட மாணவர் சமுதாயத்திற்கு மட்டும் செல்லாமல் எல்லை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக என்னை வெளியில் அழைத்து வந்து சித்தர்கள் அய்வு மையத்தினையும் அமைத்து தந்தார்கள்.
இதில் மாணவ மாணவிகள் தன் ஆற்றல் மேம்பாட்டுப் பயிற்சியையும் நடத்துகின்றோம் அது மட்டுமல்லாது வயது முதிர்ந்தவர்களுக்கும் நாம் யோகாசனப் பயிற்சிகள் கொடுக்கின்றோம். நோயில் இருந்து முழுமையாக விடுதலையாவதற்கு, இன்றைக்கு இந்த ஆங்கில மருத்துவத்தில் நோயில் இருந்து முழுமையாக விடுதலை கிடையாது. ஒரு நோய்க்கு மருந்து சாப்பிட்டால் இன்னுமொரு நோய் ஏற்படும். எனவே இந்த நோய்களை முழுமையாக தீர்ப்பதற்கு மட்டுமல்லாது நோய்கள் வராமல் பாதுகாப்பதற்கும் ஏற்னவே பெரியவர்களிடம் இருக்கின்ற நோய்களை இல்லாமல் செய்வதற்கும் மிக முக்கியமான பாதையாக என்னுடைய ஆய்வுகள் சொல்கின்றது.
ஆசனம், பிராணாயாமம், தியானம், மந்திர உச்சாடனங்கள் ஆதர சக்கரங்களாகிய டக்சஸ் என்கின்ற நாளமில்லா சுரப்பிகளை ஊக்குவிப்பதற்கு இந்த முக்கியமான பயிற்சிகளை நாம் மேற்கொள்கின்றோம். எமது முக்கிய நோக்கம் என்னவென்றால் இந்த நோய்கள் இல்லாத சமுதாயத்தினை அமைத்தல் தன் ஆற்றல் மிக்க சமுதாயத்தினை அமைத்தல்.
எந்தத் துறையில் நாம் இருக்கின்றோம் என்பது பெரிய விடயம் அல்ல. அந்த துறையில் மாமேதையாக இருக்க வேண்டும். இருக்கும் இடம் என்பது ஒரு பொருட்டே கிடையாது இருக்கும் இடத்தில் ஒரு மேன்மை பெற்ற மகனாகவோ மகளாகவோ வாழ வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்.
உங்களுக்கு மட்டக்களப்பிலுள்ள புண்ணியரத்தின சாவாமிகளின் தொடர்பு எப்படி ஏற்பட்டது…?
நான் சித்தர் ஆய்வுகள் செய்து கொண்டிருக்கும் போது எல்லா இடங்களிலும் ஜீவ சமாதிகளை ஆராய்சி செய்து 12 ஆண்டுகள் உழைத்து சித்தர் களஞ்சியம் என்று ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றேன். எமது நாட்டில் கற்பகம் புத்தகாலயம் இதை வெளியிட்டிருக்கின்றார்கள் இதை எங்கள் நாட்டைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் இங்கு வந்து செல்பவர் அவர் தற்செயலாக அந்த புத்தகத்தை வாங்கி வந்து சுவாமியிடம் கொடுத்திருக்கின்றார்.
சுவாமி இதனைப் படித்துப் பார்த்து விட்டு ஞாவேல் ஐயா மூலம் எமது ஆச்சிரமத்திற்கு வந்து எங்களை இங்கு அழைத்து வந்தார். சித்தர் களஞ்சியம் நூல் மூலமாகத்தான் நாங்கள் ஒன்று சேர்ந்தோம். உலகெல்லாம் 6000 புத்தகங்கள் மட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.
அனைவரும் இதனைப் பாராட்டியிருக்கின்றார்கள். சித்தர் ஆய்வுகளில் தடம் கண்டவர்கள் கரை கண்டவர்கள். இது சித்தர் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மிகவும் அருமையான நூல் இதனை பல்கலைக்கழகங்களில் இருந்து கூட தொடர்பு பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
தங்களின் இலங்கை வருகையின் நோக்கம் பற்றி கூற முடியுமா…?
இந்த இலங்கை பூமி எமது ஆய்வுகளுக்கு பொருத்தமானது. நான் சித்தர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு வருகின்றேன். அந்தவகையில் ஒரு விடயத்திற்கு பொருத்தமான பூமிகள் என்று சில பூமிகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான பூமியாக இலங்கை இருக்கின்றது என எமது ஓலைச்சுவடிகள் கூறுகின்றன. இவை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், சரஸ்வதி மாகா நூலகத்தில் இருக்கின்றது.
யோகம் பிறந்தது பாரத மண்ணில் என்றாலும் அந்த மண்ணில் இருந்து வந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் வாழக் கூடிய பூமியில் முக்கியமானது இலங்கை பூமி. அத்துடன் தெய்வ சக்திகள் ஒருங்கிணைந்து புதைந்திருக்கக் கூடிய இடமாகவும் இப்பூமி விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது இந்த பூமியில் ஆன்மீக தாகம் மிக்கவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.
அதாவது தண்ணீரில் மூழ்கியவர்கள் எவ்வாறு ஒட்சிசனுக்கு தவிப்பார்களோ அது போல் இங்கு இருக்கும் மக்கள் ஆன்மீக தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எப்போதெல்லாம் இந்த உலகத்தில் அதர்மம் தலை தூக்குகின்றதோ அப்போதெல்லாம் நான் இந்த பூமியில் அவதாரம் செய்வேன், என் சீடர்களை அவ்விடத்திற்கு அனுப்புவேன் என எமது வேதங்கள் உபநிடதங்களில் சித்தர்கள் எல்லாம் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அந்தவகையில் எங்கள் நோக்கம் யாதெனின் தனி மனித ஆற்றல்களை ஆக்க பூர்வமான சிந்தனைகளை நோக்கித் திருப்பபுதல். இளைஞர்களையும் யுவதிகளையும் கெடுத்து சீரழிப்பதற்கு நிறை அழிவுச் சக்திகள் இருக்கின்றன. குடி, போதை, புகை, லாஹிது வஸ்துகள் இவற்றில் இருந்து இலகுவாக எவ்வாறு விடுபடுதல்.
இலகுவாக அதிலிருந்து வெளிப்படனும் அது அவர்களின் வாழவினோடு இணைந்த பழக்கமாக இருக்கனும். பாரத மண்ணாக இருந்தாலும் இலங்கையாக இருந்தாலும் அவர்களின் பல குருகுலத்தில் தான் இருக்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் இந்தக் குருகுலக்கல்வியை, வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதற்கு நிலையங்கள் மிகக் குறைவு. பாடசாலைகளில் அரசாங்கம் ஏற்று நடத்தக்கூடிய கல்விக்கு பெயர் தொழிற்கல்வி.
தொழிற்கல்வியை மட்டுமே படித்துவிட்டு வருவதால் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லை. எனவே உடல்நலத்தோடு சேர்ந்த மனநலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். தொழிற்கல்வியைப் படித்துவிட்டு குறிப்பிட்ட தொழிலுக்கு சென்று சம்பாதித்து உடலை ஒருவகையில் கெடுத்துக் கொண்டே இருக்கின்றோம். அந்த காலத்தில் குருகுலங்களில் முதலில் உடல், மனம், ஆன்மா அதன் பிற்பாடுதான் தொழில். அக்காலத்தில் அரசனின் மகனாக இருந்தாலும், ஆச்சாரியார் துரோணரிடம் சென்று 12 ஆண்டுகள் கல்வி கற்க வேண்டும். அந்தவகையில் தான் இந்தியாவில் 10 பிளஸ் என்று இங்கு சாதாரணதரம் உயர்தரம் என்று வைத்திருக்கின்றார்கள்.
எனவே முறைகள் சரி அதில் யோக வாழ்க்கை முழுமையாக விடுட்டிருக்கின்றது. எனவே யோக வாழ்க்கையோடு சேர்ந்த தொழிற் கல்வியில் தான் இந்த உடல்நலத்தைப் பாதுகாக்க முடியும். உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கு யோக வாழ்க்கையோடு கூடிய கல்வி கற்றால் எந்த வயதிலும் அது இருபதாக இருந்தாலும் அறுபதாக இருந்தாலும் சிறப்புற வாழமுடியும்.
யோக வாழ்க்கை என்பது என்ன?
யோக வாழ்க்கை என்பது யாதெனின் வயோபத்தின் காரணமாக உடலில் ஏற்படும் தளர்ச்சிகளை மாற்றி எப்போதும் இளமையாக வைத்திருக்கக்கூடிய பயிற்சிகள் தான் இந்த யோகப் பயிற்சி. எனவே இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்று ஓட்டமும் சேர்ந்து இந்த உடலில் ஒரு உயிரோட்டத்தை சரியாக வைத்திருக்கும்.
இந்த உயிரோட்டத்தில் மின்குறுக்கு ஏற்பட்டால் அது நோய். அந்த நோய் காலத்தினால் நீடிக்கும் போது அது மரணம் வரைக்கும் கொண்டு செல்கின்றது. உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் அது மரணமாகும். அந்த மரணத்தில் இருந்து பாதுகாப்பது மட்டுமல்லாது தகுதியான உடல்நலத்தோடு வாழ எல்லோரையும் வழி செய்வதே எமது நோக்கம்.
தனி மனித அமைதி மூலமாக மட்டும்தான் உலகம் அமைதி பெற முடியும். தனி மனித சமுதாயத்தில் முதலில் ஒரு குடும்பம் அமைதி பெற வேண்டும் அந்த குடும்பத்தில் இருக்கும் தனி மனிதன் அமைதி பெற வேண்டும். அதன் பின்னர் தான் ஊர், உலக அமைதி என்று வர முடியும். எனவே தனி மனித அமைதியே உலக அமைதி.
தனி மனிதன் அமைதி பெற வேண்டுமாயின் நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெற வேண்டும். அதன்பின்னர் சரியான பொருளாதாரம் வேண்டும். அதற்கு பூரணப்படுத்தப்பட்ட அறிவு வேண்டும். எனவே வாழ்க்கைக் கல்வி அறிவுடன் இந்த தொழிற் கல்வி அறிவினை சேர்ப்பதுதான் எமது நோக்கம்.
உங்களுடைய இலங்கை விஜத்தில் எவ்வௌ;விடங்களுக்கு விஜயம் மேற்கொள்ளப்பட்டது…?
எங்கள் பூமியோடு சம்மந்தப்பட்ட கடவுள் முருகன் அவர் ஞான அறிவு கொண்ட ஞான பண்டிதன். ஒளவையாருக்கு சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று அவருக்கு பாடம் கற்பித்தவர். அதுபோல் தற்தையான சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் உச்சாடனத்தைச் சொல்லி பிரணவ மந்திரத்தின் தத்துவத்தைச் சொல்லி இங்கு வந்து ஒழிந்திருந்த இடம்தான் கதிர்காமம்.
அந்தக் கதிர்காமத்தில் இருந்து முருகன் விடுத்த வேல்கள் இரண்டு யாழ்ப்பாணம் நல்லுர் ஆலயத்திலும், கதிர்காமம் பெரிய கோயில் தெய்வானை ஆலயத்திற்கு அருகிலும் விழுந்திருக்கின்றது. இந்த இரண்டு பூமியிலும் இருக்கக் கூடியவர்கள் சாதனையாளர்கள் வெற்றியாளர்கள்.
இன்றைக்கு இலங்கையில் நடக்கக்கூடிய முக்கியமான தேர்வுகளில் (பரீட்சைகள்) அதிகமான புள்ளிகளை யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே பெருகின்றார்கள். அதற்கு முக்கிய காரணம் முருகனின் ஞான வேல் புதைந்திருப்பதால் தான். எனவே இந்த பூமி ஒரு கர்மபூமி மட்டுமல்லாது ஞான பூமி. இந்த ஞானத்தை எங்களின் வேதங்களில் சித்தர் புராணம் எனக் குறிப்பிடும் சிவபுராணத்திலும், கந்தபுராணத்திலும் இங்கிருக்கும் சில இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்தோடு இராமயணத்தோடு மிகுந்த தொடர்புடைய இடம் இந்த இடம். நுவரெலியாவில் அசோகவனத்திற்கு சென்றிருந்தோம். அங்கு வாழ்ந்த முருகேசு சித்தர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பண்டித் கண்ணைய யோகி கிருஸ்ணபகவானின் மாநச யோகத்தைச் சொல்லிக் கொடுத்தவர் அவரின் குரு அகத்தியர். அகத்தியரை மானசீக குருவாக ஏற்று பண்டித் கண்ணையா சுவாமிகளிடம் பாடம்படித்து சீடராக வாழ்ந்த முருகேசு சுவாமிகள் வாழ்ந்த நுவரெலியாவிற்குச் சென்றோம்.
அத்துடன் கோரக்கச் சித்தரோடு தொடர்பு கொண்ட திருகோணமலை, திருக்கோணேஸ்வரம், கங்குவேலி - அகத்தியர் பெருமான் முதலில் அவரது சாபத்தைப் போக்குவதங்கு வந்து இறங்கிய இடம் போன்ற இடங்களைப் பார்த்தோம். இதுபோன்ற ஆன்மீக சுற்றுப்பிரயாணம் ஆன்மீக உபதேசங்களையும் மேற்கொண்டோம்.
ஆய்வு முயற்சியின் தொடர்ச்சிக்காக இங்கு வந்துள்ளேன் என்றீர்கள், இதற்கு முன்னர் வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கின்றீர்கள…?
இதற்கு முன்னர் மலேசியா நாட்டிற்குச் சென்றிருக்கின்றேன். 2007ம் ஆண்டு உலக சித்தர் நெறி மாநாடு முதலாவது மாநாடு மே 25 தொடக்கம் 27 வரை இடம்பெற்றது. இதில் 64 ஆய்வாளர்கள் சென்று உரையாற்றினோம் அதில் நானும் ஒருவனாக சென்றேன்.
மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த மாநாட்டை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முன்னின்று நடாத்தி அதில் எல்லோருடைய கட்டுரைகளையும் பார்த்து என்னுடைய கட்டுரையும் தகுதி பெற்று அவர்கள் செலவிலேயே என்னை அழைத்துச் சென்றார்கள் மலேசிய உட்பட சிங்கப்பூர், தாய்லாந்த் ஆகிய நாடுகளுக்கும் அழைத்துச் சென்றார்கள். கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் நான் ஏற்கனவே பணயம் மேற்கொண்டிருக்கின்றேன்
இந்த இலங்கை நாட்டில் இதன்பிற்பாடு உங்கள் ஆய்வுப் பணிகள் எவ்வாறு இருக்கும்…?
இலங்கையில் நிறைய ஆன்மீக தாகம் கொண்ட மக்கள் இருப்பதால் எமது இளைஞர் சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டக் கூடிய மகான் வந்து விட மாட்டாரா அவர்களின் பழக்கத்தில் இருந்து வழக்கத்திற்கு மாற்ற ஒரு ஆன்மீக குரு வந்து விட மாட்டாரா என்ற அவர்களின் ஏக்கமே என்னை இங்கு கொண்டு வந்திருக்கின்றது.
கண்டிப்பாக இந்த மக்களின் இந்த கல்விக்கு நல்லதொரு வெகுமதி இருக்கின்றது என்பதை மண்டூரில் களுவாஞ்சிக்குடி, திருகோணமலை போன்ற இடங்களில் எல்லாம் சென்று பேசியிருக்கின்றேன். மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது எமக்கு விளங்கியது நல்ல ஒரு வல்லமை பொருந்திய மக்கள் எமது ஆய்வுக்காக வருவார்கள் என்று நம்புகின்றோம் எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பிறகு இன்னும் மக்கள் அமைதியான சந்தோசமான நிலைக்கு வரவில்லை, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கின்றீர்கள்…?
தீதும் நன்றும் பிறர் தர வரா. எனது அப்பா அம்மா சேர்த்து வைத்த சொத்து எமக்குத் தான். அதுபோல் எமது முன்னோர்கள் கர்மச் சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கின்றார்கள். அவர்கள் யாருக்கோ செய்த தீவினைதான் எம்மைப் பாதித்திருக்கின்றது. அவர்கள் தீவினைகள் செய்யாமல் இருந்திருந்தால் இந்த தீங்குகள் நமக்கு வந்திருக்காது. தற்போது சுனாமி வந்து அழித்தமை கூட அதனால் வந்த விளைவுகள் தான்.
இந்த யுத்தம் நடந்தது ஒரு கூட்டத்தார் அழிந்தது. இதற்கு காரணங்கள் நமக்கு முன்னால் வாழ்ந்த நம்முடைய முன்னோர்கள் தான் என்ற ஆணவத்தினால் இந்த சமுதாயத்திற்கு இழைத்த கொடுமைகள் தான் நமக்கு வந்திருக்கின்றது. எனவே இந்த கொடுமைகளில் இருந்து நாம் விடுதலையாவதற்குரிய கவனப்பாடுகள் தான் மிக முக்கியம். நான் நாட்டுக்கு வந்தபோது, வீரகேசரியில் பார்த்த போது புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாட்டுக்கு வரலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. எனவே இந்த சத்திய யுகத்திற்கான பிரகடனத்தில் இது முக்கிய அம்சம்.
தற்போது மாறியிருக்கின்ற அரசாங்கம் கண்டிப்பாக தமிழர்களைக் கைவிடாது. இந்த சத்திய யுகம் பிறப்பதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்க போகின்றோம். புலம்பெயர்ந்தவர்களை இந்த அரசாங்கம் மீண்டும் அழைக்கின்றார்கள் என்றால் கண்டிப்பாக நமக்கான நல்ல வழிகளை வைத்துக் கொண்டு தான் அவர்கள் அழைப்பார்கள்.
கண்டிப்பாக அதை நாம் நம்பலாம். அதை நாம் வாழ்ந்துதான் காண்பிக்கப் போகின்றோம். அவர்கள் பார்வை நம் பக்கம் படும் படி நாம் வாழப் போகின்றோம். அதற்கான பயிற்சிகள் தான் நாம் தற்போது ஆரம்பித்திருக்கின்றோம். இந்த அரசாங்கத்தின் பார்வை நம் பக்கம் வந்திருக்கின்றது. புலம்பெயர்ந்தவர்களை அழைக்கும் கருமம் செய்பவர்கள் நிச்சம் எம்மைக் கைவிட மாட்டார்கள்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக