(சுபஜன்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலை கிராம சேவகர் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி வீதியில் உள்ள காட்டுப்பகுதியில் அனாதரவாக கிடந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் விசேட தேவையுடையவர் என்றும் செங்கலடி எல்லை நகர் வீதியைச் சேர்ந்தவர் என்றும் 1974.10.17ம் திகதி பிறந்த கோணலிங்கம் வடிவேல் என்றும் அவரது அடையாள அட்டை மூலம் இனங்காணப்பட்டுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக