மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வின் இறுதிநாள் திருவிழா கூட்டுதிருப்பலியானது மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஏ.தேவதாசன் அடிகளார் தலைமையில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் திருச்செபமாலை வழிபாட்டுடன் ஆரம்பமாகிது ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கடந்த (18) வியாழக்கிழமை பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் மூன்றாம் நவநாளாகிய (20) சனிக்கிழமையாகிய நேற்றையதினம் புனிதரின் திருச்சொரூப பவனியானது கல்லடி பிரதான வீதிகள் வழியாக இடம்பெற்று ஆலயத்தினை சென்றடைந்ததும், நற்கருணை வழிபாடு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இறுதி நவநாளாகிய நாளாகிய இன்று பெருநாள் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் புனிதராம் அந்தோனியாரின் ஆசியுடன் திருவிழா இனிதே நிறைவுபெற்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக