சனி, 13 ஜூன், 2015

மண்டூர் 40ஆம் கொலணியில் இடம்பெற்ற மோதில் இளைஞன் படுகாயம்

(ரஜன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


நேற்று மாலை 6.00மணியளவில் மண்டூர் 40ஆம் கொலணியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த யோகராஜா தனுஜன்(17வயது)இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

தலையில் கோடாரியால் கொத்தப்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கமே மோதல் இடம்பெறக்காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate