கிழக்கிலங்கையின் தொன்மைமிகு ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை நொச்சிமுனை,அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர்ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மிகப்பழமைவாய்ந்த ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்ற கிரியைகள் இன்று காலை ஆரம்பமானது.
கிரியைகள் யாவும் மஹோற்சவ கால குரு சிவாகமகிரியாதிலகம் சிவஸ்ரீ கருணாகர மகேஸ்வரக்குருக்களினால் நடாத்தப்பட்டது.
இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் ஆரம்பமான மகோற்சவத்தில் அபிசேகம் மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கொச்சீலைக்கு விசேட பூஜைகள் செய்யப்பட்டு கொடிச்சீலை உள்வீதியுலா நடைபெற்றது.
கொடித்தம்பம் அருகில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் நாத,வேத,அடியார்களின் ஆரோகரா ஓசையுடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்துக்காக அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் பூஜையும் நடைபெற்ற அடியார்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.
மிகப்பழமைவாய்ந்த ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்ற கிரியைகள் இன்று காலை ஆரம்பமானது.
கிரியைகள் யாவும் மஹோற்சவ கால குரு சிவாகமகிரியாதிலகம் சிவஸ்ரீ கருணாகர மகேஸ்வரக்குருக்களினால் நடாத்தப்பட்டது.
இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் ஆரம்பமான மகோற்சவத்தில் அபிசேகம் மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கொச்சீலைக்கு விசேட பூஜைகள் செய்யப்பட்டு கொடிச்சீலை உள்வீதியுலா நடைபெற்றது.
கொடித்தம்பம் அருகில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் நாத,வேத,அடியார்களின் ஆரோகரா ஓசையுடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்துக்காக அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் பூஜையும் நடைபெற்ற அடியார்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக