திங்கள், 15 ஜூன், 2015

“மிஸ்டர் ஈஸ்ரன்” ஆணழகன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் சாதனை

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட “மிஸ்டர் ஈஸ்ரன்” ஆணழகன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.


கிழக்கு மாகாண விளையாட்டு விழா மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றது.

இவற்றில் “மிஸ்டர் ஈஸ்ரன்” ஆணழகன் போட்டி இன்று பிற்பகல் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த பெருமளவான வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதனடிப்படையில் இறுதிப்போட்டியில் முதல் இடத்தினை மட்டக்களப்பினை சேர்ந்த எஸ்.சியாம்குமார் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தினை அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த எம்.சி.எம்.அஸ்மீர் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பினை சேர்ந்த எஸ்.புவனசிங்கம் பெற்றுக்கொண்டார்.

இறுதி பரிசு வழங்கல் நிகழ்வு கிழக்கு மாகாண விளையாட்டுப்பணிப்பாளர் கே.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.




























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624949

Translate