திங்கள், 15 ஜூன், 2015

வெளிநாடு சென்ற மனைவி: மீட்டுத் தருமாறு கணவன் கோரிக்கை

வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஓமடியாமடு கிராமத்தில் பெண்ணொருவர் போலி முகவர் மூலம் போலிக் கடவுச் சீட்டைப் பெற்று வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளதாகவும் அவரை மீட்டுத் தருமாறு அப்பெண்ணின் கணவன் கோரிக்கை விடுத்துள்ளார்.தனது சம்மதமின்றியும் பராயம் அடையாத பிள்ளைகளையும் கைவிட்டு மத்திய கிழக்கு நாட்டிற்கு மனைவி சென்றுள்ளதாக லி.விஜயகுமார் என்ற நபர் வாழைச்சேனை பொலிஸ் நிலையம், மாவட்ட அரசாங்க அதிபர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோர்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்.



தமது மனைவி கணேசன் சசிகலா வயது (28) அடிக்கடி மத்திய கிழக்கு நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து வந்ததாகவும், தாம் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தவேளை தமக்கு தெரியாமல் கடந்த 2015.05.26ம் திகதி மத்திய கிழக்கு நாடொன்றிக்கு சென்றுள்ளதாக கவலை லி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.இவருக்கு போலியான ஆவணங்களை தயாரித்து வீட்டுப் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றிக்கு போலி முகவரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வாரைப் பிரதேசம் ஓமடியாமடுவில் வசிக்கும் இவர், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பப் பின்னணி அறிக்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றார்.இந்த ஆவணங்களுக்கு ஒப்பமிட்ட கிராம உத்தியோகஸ்த்தர், பிரதேச செயலாளரின் செயலாளரது பெயர் விபரங்களை தேவையேற்படின் தெரிவிக்க தயராகவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

தமக்கு ஜெ.அபிசாலினி (வயது 9), ஜெ.நியோலினா (வயது 7) ஆகிய இரு பெண் பிள்ளைகள் உள்ளதாகவும் இவ்வருடம் இடம்பெறப்போகும் 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மூத்த மகளின் கல்வி நிலமையில் இச்சம்பவம் மனநிலை ரீதியாக பெரிதும் பாதித்து காணப்படுவதாக தெரிவிக்கின்றார்.எனவே தனது மனைவியை மீட்டுத் தருமாறும் போலி முகவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624968

Translate