மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் வருடாந்த திருச்சடங்கு இன்று(30.06.2015) செவ்வாய் கிழமை கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து முகக்களை எழுந்தளப்பணும் நிகழ்வினை தொடர்ந்து கதவு திறந்தல் சடங்கு இடம் பெற்றது.
இவ் திருச்சடங்கானது இன்று(30.06.2015) செவ்வாய் கிழமை ஆரம்பமாகி எதிர் வரும் சனிக்கிழமை (04.07.2014) களியாணக்கால் பூசையும் அதனைத்தொடர்ந்து (06.07.2014) திங்கள் கிழமை பின் இரவு வாளி பாடும் நிகழ்வுடன் வருடாந்த திருச்சடங்கு நிறைவடையும். சடங்கு காலங்களில் அம்பாளின் திருவுருவம் தாங்கிய அலங்கார தோரண ஊர்வலம் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர் வீதிகளில் பவனி வரும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக