சனி, 27 ஜூன், 2015

சென்ரல் -மைக்கேல் மோதும் பாடுமீன்களின் சமர் ஆரம்பம்

“பாடு மீன்களின் சமர் ” என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு பிரபல பாடசாலைகளான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் , மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையில் நடாத்தப்படும் 6வது மாபெரும்  கிரிக்கெட்  சமர் தற்போது இன்று காலை ஆரம்பமானது.


மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் இன்று காலை 08.30 மணியளவில்  ஆரம்பமானது.

இதன் ஆரம்ப நிகழ்வில் இரண்டு பாடசாலை வீரர்களுக்கும் அதிதிகளுக்கும் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் கலந்து சிறப்பித்தார்.

50 ஓவர் கொண்ட  கிரிக்கெட்  போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.





























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate