திங்கள், 22 ஜூன், 2015

பெற்றோரின் கவலையீனம் காரணமாக வாய்க்காலில் உயிரை விட்ட இரண்டு வயதுப் பிஞ்சு–வவுணதீவில் சம்பவம்

பெற்றோரின் கவனயீனம் காரணமாக இந்த உலகில் வாழவேண்டிய பிஞ்சுகள் இரையாகுவது தொடர்பில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.


பெற்றோரின் கவனயீனம் காரணமாக இரண்டு வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இரண்டு வயது குழந்தையொன்று வாய்க்காலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல் 4.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஏறாவூர்,ஐயங்கேணியை சேர்ந்த கிருஸ்ணகுமார் செமிட்ட என்னும் இரண்டு வயதும் நான்கு மாதங்களையும் உடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

ஐயன்கேணியில் இருந்து தனது தாயாருடன் பாவற்கொடிச்சேனைக்கு வந்து சில மணி நேரங்களிலேயே இந்த துயரச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

வாய்க்காலுக்கு அருகில் குறித்த குழந்தையின் வீடு இருந்ததாகவும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை குறித்த வாய்க்காலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

இதன்போது சடலம் தாண்டியடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நேற்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோரின் கவனயீனமே குறித்த குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.








Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate