திங்கள், 29 ஜூன், 2015

தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு வீடுகள் கையளிப்பு

அரசாங்கம் வழங்கும் உதவிகளுடன் மக்களும் பங்களிப்பினை வழங்கும்போதே அவை பூரண வெற்றியை அடையும் என தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இதன்கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரிமை தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட இன்றையா நாளில் பிரதேச செயலகத்துக்கு ஒரு வீடு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

இதன்கீழ் மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தொழில்நுட்பட உத்தியோகத்தர் சு.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட உதவி முகாமையாளர் ஜி.நிர்மலராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வறிய மக்களுக்கு வீடு என்னும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுவந்தன.மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 14 வீடுகள் அமைக்கப்பட்டு இந்த வீடுகள் இன்று திறந்துவைக்கப்பட்டன.













Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624955

Translate