இளஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு இலங்கைக்கு தொழிற் பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து களுவாஞ்சிகுடி தொழிற் பயிற்சி கல்லூரியில் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக் கூடிய இவ் வருடத்திற்கான பாட நெறிகளை இரண்டாவது தடவையாக ஆரம்பிக்கவுள்ளது என்பதனை உங்களுக்கு மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் மிகச் சிறந்த தொழில் வாய்ப்புகளை உடனடியாக வழங்கும் முகமாக NVQ சார் பயிற்சி நெறிகளை வழங்கும் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்சி நிலையத்தில் பாடநெறிகளுக்கான பதிவு எதிர்வரும் 30.06.2015 செவ்வாய்கிழமை களுவாஞ்சிகுடி அற்புதப் பிள்ளையார் ஆலய வீதியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் திறந்த நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவிருப்பதனால் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள ஆர்வத்துடன் உள்ள க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்களும் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களும் இவ் பயிற்சி நெறிகளில் கலந்து கொண்டு தங்களின் எதிர்காலத்தினை வளப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பின்வரும் பாடநெறிகள் ஆரம்பமாகவுள்ளது கணணி, நீர்குழாய் பொருத்துதல், உருக்கிஒட்டுதல், மின்இணைப்பாளர், மணப்பெண் அலங்கரிப்பாளர் ஆகிய பாட நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் சில பாடநெறிகளுக்கு சிறுதொகைப் பணம் வழங்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும். எனவே 0777140869 தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்
0 facebook-blogger:
கருத்துரையிடுக