போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தைமுன்னிட்டு மட்டக்களப்பு கிரான் வாராந்த சந்தை முன்றலில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் நடைபெற்றது.
பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தையும் இணைத்து மட்டக்களப்பு-வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா இந்த வீதி நாடகத்தை ஏற்பாடுசெய்திருந்தது.
பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இவ்வீதிநாடகத்தை பார்வையிட்டனர்.நாம் அர்ப்பணித்து சமூகத்தைக் காப்போம். எமது பிள்ளைகளை போதைவஸ்துகளிலிருந்து பாதுகாப்போம். துஷ்பிரயோகங்களிலிருந்து சிறார்களையும் பெண்களையும் காப்போம்.
எதிர்கால சமுதாயத்த்pற்கு போதைவஸ்;து மற்றும் வன்முறை இல்லாத அழகிய உலகினை உருவாக்கிகொடுப்போம் போன்ற விடயங்கள் இந்த நாடகத்தின் கருப்பொருட்களாய் அமைந்திருந்தன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக