ஞாயிறு, 14 ஜூன், 2015

பிரதி பொலிஸ் மா அதிபர் சி.என்.வாகிஸ்ட்ட ஓய்வு, பிரியாவிடை வைபவம்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சி.என்.வாகிஸ்ட்ட ஓய்வு பெற்றுச் செல்வதையொட்டி, அவருக்கு  பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடனான பிரியாவிடை வைபவம் இன்று சனிக்கிழமை (13) மட்டக்களப்பில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்க மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான அநுரத் ஹக்மன பண்டார மற்றும் பி.எம்.தஸாநாயக்கா உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதரிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் போது அணி வகுப்பு மரியாதை இடம் பெற்று அவருக்கான நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. 











Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate