திங்கள், 29 ஜூன், 2015

மாமாங்கம் சிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு நேற்று இரவு கதவுதிறத்தலுடன் ஆரம்பமானது.


மாமாங்கம் பகுதியில் மிகவும் நீண்டகாலமாக எழுந்தருளியுள்ள சிவமுத்துமாரியம்மன் ஆலயமானவும் இப்பகுதியின் பிரசித்திபெற்ற ஆலயமாக கருதப்படுகின்றது.

நேற்று இரவு ஆலயத்தின் பிரதமகுரு சுமனபால தலைமையில் இந்த கதவு திறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

விசேட கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு தெய்வாதிகள் ஆட இந்த கதவு திறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் திருச்சடங்கானது எதிர்வரும் 02ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதுடன் எதிர்வரும் புதன்கிழமை தீமிதிப்பு உற்சவம் நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து மறுதினம் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் கும்பம் சொரியும் நிகழ்வுடன் உற்சவம் நிறைவுபெறும்.













Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate