சர்வதேச யோகா தினம், மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி பிரதான மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது என மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகம் அறிவித்துள்ளது.
யோகா சிகிச்சை நிபுணர் செல்லையா துரையப்பா தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அதிதிகளாக மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வி. தவராசா, மாநகர சபை ஆணையாளர் எம். உதயகுமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. தவராசா, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகத்தினால் யோகா பயிற்சி கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. சர்வதேச யோகா தின நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு யோகா சிகிச்சை பற்றி அறிந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக