பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா மற்றும் தேசிய சித்திரப்போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை சமூகத்தினால் இந்த கௌரவிப்பு நிகழ்வு சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.
இதனையொட்டி சாதனை படைத்த மாணவர்கள் வாகனங்களில் வரவேற்பு செய்யப்பட்டதுடன் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோரால் வரவேற்பளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார் மற்றும் மண்முனை வடக்கு கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டியில் கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் பெரும் சாதனைகளை படைத்துள்ளனர்.வலய மட்டத்தில் தொடர்ந்து மூன்று வருடங்களாக தொடர்ந்து சம்பியனாகவுள்ள இந்த பாடசாலை மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் முதல் இடத்தினையும் பெற்றுசாதனை படைத்துள்ளது.
அதேபோன்று அண்மையில் தேர்தல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்;ட தேசிய ரீதியிலான சித்திரப்போட்டியில் முதல் இடத்தினையும் மூன்றாம் இடத்தினையும் பெற்று தேசிய ரீதியிலாக மாவட்டத்துக்கு பெருமையினை தேடித்தந்துள்ளது.
இதன்போது சாதனைகளை படைத்து மட்டக்களப்பு பெருமை தேடித்தந்த மாணவர்கள் இதன்போது பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை சமூகத்தினால் இந்த கௌரவிப்பு நிகழ்வு சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.
இதனையொட்டி சாதனை படைத்த மாணவர்கள் வாகனங்களில் வரவேற்பு செய்யப்பட்டதுடன் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோரால் வரவேற்பளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார் மற்றும் மண்முனை வடக்கு கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டியில் கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் பெரும் சாதனைகளை படைத்துள்ளனர்.வலய மட்டத்தில் தொடர்ந்து மூன்று வருடங்களாக தொடர்ந்து சம்பியனாகவுள்ள இந்த பாடசாலை மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் முதல் இடத்தினையும் பெற்றுசாதனை படைத்துள்ளது.
அதேபோன்று அண்மையில் தேர்தல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்;ட தேசிய ரீதியிலான சித்திரப்போட்டியில் முதல் இடத்தினையும் மூன்றாம் இடத்தினையும் பெற்று தேசிய ரீதியிலாக மாவட்டத்துக்கு பெருமையினை தேடித்தந்துள்ளது.
இதன்போது சாதனைகளை படைத்து மட்டக்களப்பு பெருமை தேடித்தந்த மாணவர்கள் இதன்போது பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக