இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்த யோசனையின் அடிப்படையில், எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, முதலாவது சர்வதேச யோகா தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு இடங்களிலும் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒருகட்டமாக, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் ஏற்பாட்டில் காலிமுகத்திடலில் 21ம் திகதி காலையில் யோகா பயி;ற்சிகள் நடத்தப்படவுள்ளன.
அதேநேரம், யாழ்ப்பாண இ;ந்திய துணை உயர்ஸ்தானிகரத்தின் ஏற்பாட்டில், இரண்டு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாக துணைத் தூதுவர் ஏ.நடராஜன் அறிவித்துள்ளார்.
இதன்படி, 21ம் திகதி காலை 7.30 முதல் -9.30வரை யாழ்ப்பாண மத்தியக்கல்லூரி மைதானத்தில் ஐயாயிரம் மாணவர்கள் பங்கேற்கும் யோகா நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதனையடுத்து மாலை 4.30 முதல் - 6.30 வரை யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியில் 250 ஆசிரியர்கள் பங்கேற்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியல் கலந்லூரியில் மாலை 4.30க்கு நடைபெறவுள்ள நிகழ்வில் இந்திய பேராசிரியர் ஒருவரின் தலைமையில் மனவளக்கலையின் உச்சக்கட்ட பயிற்சியான 'காயகல்ப பயிற்சி'யும், 'மனவளகலை ஒரு அறிமுகமும்' நடைபெறும் என்று மனவளக்கலை அமைப்பின் யாழ்ப்பாண வலய தலைவர் அறிவிக்கிறார்.
கொழும்பில் காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள நிகழ்வில் மனவளக்கலையின் மன்றத்தி;ன் அன்பர்களும் பங்கேற்கவுள்ளதாக இலங்கை மனவளக் கலைமன்றத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இதனைத்தவிர ஹட்டனில் மனவளக்கலை அமைப்பு தனியாக யோகா நிகழ்வு ஒன்றை நடத்துகிறது.
கண்டி மற்றும் அம்பாந்தோட்டையின் துணை இந்திய உயர்ஸ்தானிகரகங்களும் யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
மாளிகாவத்தை ஹத்தா யோகா நிலையத்தின் யோகா நிகழ்வு விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கில்; எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ளது.
அன்றையதினம் நிலையத்தினால் பயிற்றப்பட்ட மாணவர்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரை பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஏற்பாட்டில் யோகா விழிப்புணர்வு நடைப்பயணம் 21ம் திகதி காலை நடைபெறவுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக