கல்முனை கல்வி வலயத்தில் இவ்வருடம் பிரதீபா பிரபா விருது பெறுவதற்கு 03 அதிபர்களும் 09 ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன், பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் ஜே.டேவிட், மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டவர்களாவர் . இவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை (06) பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடை பெறும். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
வியாழன், 1 அக்டோபர், 2015
Home »
» கல்முனையில் பிரதீபா பிரபா விருதுக்கு 03 அதிபர்கள் தெரிவு
0 facebook-blogger:
கருத்துரையிடுக