சனி, 17 அக்டோபர், 2015

கபடிப் போட்டியில் தேசியரீதியில் சாதனைபடைத்த வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கபடிப் போட்டி – 2015, நிகழ்வில் மட்ஃககுஃகிரான் மகா வித்தியாலயத்தின்; 19 வயது பெண்கள் அணியினர் தங்கப் பதக்கத்தையும், 19 வயது ஆண்கள் வெங்கலப் பதக்கத்தையும் பெற்று எமது கிழக்கு மாகாணத்திற்கும், மட்டக்களப்பிற்கும் பெருமையினை ஈட்டிக் கொடுத்துள்ளனர். அத்தோடு 2014இல் 15வயதுக்குட்பட்ட ஆண்கள் வெங்கலப்பதக்கத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இவர்களைக் பாராட்டி கௌரவிக்கும் வகையில் கிரான் கருணா ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் அணுசரணையுடன் கிராம பொது அமைப்புக்களும் பாடசாலை பெற்றார் ஆசிரியர் சங்கமும் இணைந்து மாவட்ட ரீதியிலான வரவேற்பு நிகழ்வினை எதிர்வரும் சனிக்கிழமை (2015.10.17) அன்று நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். எமது கிராமத்திற்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த இவர்கள் அனைவரையும்; பாராட்டும் இந் நிகழ்வில்; தாங்களும் கலந்துகொண்டு எம்மண்சார்பில் இவர்களைப் பாராட்டி கௌரவிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate