சனி, 17 அக்டோபர், 2015

சித்தாண்டி அலைமகள் பாடசாலையின் வரலாற்றில் 22 வருடங்களின் பின் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி


மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக 22 வருடத்தின் பின் புலமை பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் சித்தியடைந்ததையிட்டு அவர்களை வரவேற்று பாராட்டும் முகமாக இன்று வித்தியாலயத்தின் அதிபர் பூ.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

கடந்த யுத்த காலத்தின்போது மிகவும் பாதிக்கப்பட்ட பாடசாலையாகவும் ஓலைக்கொட்டிலில் பல வருடங்களாக தனது கல்விப்பணியை ஆரம்பித்து தற்பொழுது ஓரிரு கட்டட வசதியுடன் மிகவும் வறிய மாணவர்களை கல்வியின் பால் முன்னேற்றவேண்டும் என்ற பாடசாலையின் ஆசிரியர் மற்றும் அதிபரின் முயற்சியின் பலனாக இம்முறை இரண்டு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளனர்.
இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் 86 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியிருந்தபோது 70 தொடக்கம் 100 வரையான புள்ளியை 9 பேரும்ரூபவ் 100 புள்ளிக்குமேல் 4 பேரும்ரூபவ் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்திபெற்று இரண்டு மாணவர்களும் பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர்.

மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர் பூ.அருணா அவர்களின் கற்பித்தல் மூலமாக இம்முறை இரண்டு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்குமேல் சித்தியடைந்துள்ளனர்.

வறிய மாணவர்களையும் கல்விக்குரிய அடிப்படை வசதிக்குரிய வளங்களை மிகவும் குறைவாக கொண்ட கிராமத்தில் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டமை வரலாற்று முக்கிய நிகழ்வு என பிரதிக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வுக்கு கல்குடா கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) திருமதி சுஜாதா குலேந்திரகுமார்ரூபவ் ஏறாவூர்பற்று -2 கோட்டக்கல்வி அதிகாரி பொ.சிவகுருரூபவ் ஏறாவூர்பற்று உலக தரிசன திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ரவி மற்றும் பலர் கல்வி அதிகாரிகள் பெற்றோர்கள்ரூபவ் பாடசாலை அபிவிருத்திக் குழு என்பன கலந்துகொண்டிருந்தனர். 



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate