சாகும் வரை உணவு தவிர்த்து சிறைச்சாலைகளில் போராடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழின உணர்வாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நடாத்தும் அடையாள உண்ணாவிரத போராட்டம் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் சனிக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் கோ. கருணாகரமின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதம் இடம்பெற்று வருகின்றது.
காலை ஆரம்பமான அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சா. வியாளேந்திரன், ஞா. ஸ்ரீநேசன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கவீந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினர், பிரமுகர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
விடுதலை எமது பிறப்புரிமை, மனித உரிமைகளை மிதிக்காதே, எமது விடுதலையை தடுக்காதே, அரசே தமிழர்களுக்கு ஓர் நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா, தளபதிகளுக்கோ சிம்மாசனம் எங்களுக்கு ஏன் சிறைவாசம், என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளோர் வலியுறுத்துகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக