திங்கள், 5 அக்டோபர், 2015

சித்தாண்டி விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தின நிழ்வுகள் வித்தியாலயத்தின் அதிபர் பூ.சுந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (முகாமைத்துவம்) ரி.ரவிரூபவ் சிறப்பு அதிதிகளாக சித்தாண்டி -1 கிராம சேவகர் ஆர்.உதயதேவாரூபவ் மாவடிவேம்பு கிராமசேவகர் வீ.குணசீலன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிகழ்வை முன்னிட்டு பாடசாலையில் பல்வேறு மட்டங்களில் சதனை படைத்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வருகைதந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையில் பாடசாலை காலங்களில் மாணவர்கள் சாதனை படைப்பதற்கு பெற்றேர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அத்துடன் சகல மாணவர்களும் எதிர்காலத்தில் சாதனைகள் பல படைக்கவேண்டுமென வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரி.ரவி தெரிவித்தார்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate