வெள்ளி, 9 அக்டோபர், 2015

பேராசிரியர் மௌனகுருவின் “மட்டக்களப்பின் மரபு வழி நாடகங்கள்”நூலின் அறிமுக நிகழ்வு

பாரம்பரிய கலைகளையும் பண்பாடுகளையும் எமது அடுத்த சந்ததியினருக்கு கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பும் கடமையும் தற்போதைய மாணவர்களுக்கு இருப்பதாக பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.


பேராசிரியர் மௌனகுரு எழுதிய “மட்டக்களப்பின் மரபு வழி நாடகங்கள்”நூலின் இரண்டாம் பதிப்பின் அறிமுக நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் மைக்கல் கொலனி; தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுண்கலை துறை ஆசிரியர் ஆர்.ஜெகநாதன்,ஆசிரியர் திருமதி மகேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு என தனித்துவமாகவுள்ள நாடகங்களைக்கொண்டதாக 19983ஆம் ஆண்டு பேராசிரியர் சி.மௌனகுருவினால் எழுதப்பட்டு 1998ஆம் ஆண்டு முதல் பதிப்பாக இந்தியாவின் பார்க்கர் நிறுவனத்தினால் இந்த நூல் வெளியீடுசெய்யப்பட்டது.

இதன் இரண்டாம் பதிப்பு 16வருடங்களுக்கு பின்னர் கடந்த ஆண்டு கொழும்பு குமரன் வெளியீட்டு நிறுவனத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த நூல் இரண்டாம் பதிப்பு மட்டக்களப்பில் நேற்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி உலகமெங்கும் பரந்துவாழும் கலையினையும் தமது பண்பாட்டினையும் நேசிக்கும் மக்களுக்கு ஏற்றவகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate