(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தனது தஃவத் -இஸ்லாமிய பணிகளின் ஒரு அங்கமாக பள்ளிவாயல் (மஸ்ஜித்) நிர்வாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு ஒன்றினை 10-10-2015 நாளை சனிக்கிழமை மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை காத்தான்குடி-03 முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயல் மேல் மாடியில் நடாத்தவுள்ளது.
'மஸ்ஜித் நிர்வாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக மார்க்கப் பொறுப்புக்களும்' எனும் தொனிப்பொருளில்; மேற்படி மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) மற்றும் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜி.எம்.ஜெலீல் (மதனி) ஆகியோர் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக