வியாழன், 1 அக்டோபர், 2015

வெல்லாவெளியில் வீடொன்றில் இருந்த பெருமளவு ஆலய நகைகள் கொள்ளை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டையில் உள்ள ஆலய வண்ணக்கர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார்29 பவுன் தங்க நகைகள் நேற்று புதன்கிழமை மாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை வீட்டின் உரிமையாளரான ஆலய வண்ணக்கர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற பயன்படுத்திக்கொண்ட திருடர்கள் வீட்டினுள் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர்.

கொள்ளையிட்டுச்செல்லப்பட்டுள்ள நகைகள் குறித்த பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சொந்தமான நகைகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சுமார் 225 கிராம் எடைகொண்ட 12 இலட்சத்து 25000ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பில் ஸ்தலத்துக்கு சென்றுள்ள தடவியல் குற்றப்புலனாய்வுப்பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate