செவ்வாய், 13 அக்டோபர், 2015

கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு  கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஆசிரியர் தின நிகழ்வு  இம்முறை ஆசிரியர்களை வலுவூட்டி நிலைபேறான சமூகத்தை கட்டி எழுப்புவோம் “ எனும் தொனிப்பொருளில் பாடசாலை  மாணவி செல்வி .ஜீ. டிலக்ஷியா தலைமையில் 12.10.2015 மாலை 03.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில்  இடம்பெற்றது  .
 கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது  .

இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வில்  மாணவர்களினால் அதிதிகளுக்கு  மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர் .

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன்  ஆசிரியர்களினால்  ஆசிரியர்  கீதம் பாடப்பட்டது . அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது  .

விழிப்புலனற்ற  மாணவர்களை   கல்வியிலும்  சமூக மட்டத்திலும்  மற்றவர்களை போன்று    முன்னிலையில் கொண்டு செல்லும்  ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது .

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக  மட்டக்களப்பு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம் . குருகுலசிங்கம் ,மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்  எ . சுகுமாரன் , கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை  தலைவர் எம் .தயானந்தன் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள்  பாடசாலை மாணவர்கள் மற்றும்  மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  





















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate