உலக குடியிருப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் நாட்டிலுள்ள சுமார் 12 லட்சம் குடும்பங்களுக்கு வீடு தேவை என தேசிய வீடமைப்பு அதிகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனைக்கருத்திற் கொண்டு ஒவ்வொரு வருடமும் சுமார் 50 லட்சம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார்.
1986 ஆம் ஆண்டு தொடக்கம் ஒக்டோபர் மாதம் வருகின்ற முதலாவது திங்கட்கிழமையை உலக குடியிருப்பு தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.
குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மாளிகாவத்தை வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதுடன் குடியிருப்பு தின நிகழ்வுகளும் இன்று நடைபெறவுள்ளது.
சுதந்திர பூமியில் அனைவரும் என்ற தொனிப்பொருளில் இம்முறை குடியிருப்பு தினம் கொண்டாடப்படுவதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பல்சூரிய குறிப்பிட்டார்.
இதேவேளை, குடியிருப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் வீட்டுரிமை கிடைக்கப்பெற்ற சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக