வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு அலங்கார உற்சவம் நேற்றுமுன்தினம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது. எதிர்வரும் 13 ஆம் திகதி தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவடையும்.
நேற்று முன்தினம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிமுதல் 9 மணி வரையுள்ள சுபவேளையில் ஆலய திருக்கதவு திறத்தலுடன் இவ்வருட உற்சவம் ஆரம்பமாகியதென ஆலய பரிபாலனசபைத் தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
உற்சவகால கிரியைகள் யாவும் ஆலய பிரதமபூசகர் சி.சதாசிவம் மற்றும் ஆலய பூசகர் கு.லோகேஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்று பாற்குடவனி
06ஆம் திகதி பாற்குடபவனி ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பத்திரகாளியம்பாள் ஆலயத்தை வந்தடையும். 10 ஆம் திகதி வீரகம்பம் வெட்டுதல் 12ஆம் திகதி நோற்புக் கட்டலுடன் 13ஆம் திகதி காலையில் தீமிதிப்பு இடம்பெறும். தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும்.
22ஆம் திகதி வழமைபோல கௌரிவிரதம் அனுஸ்டிக்கப்படும்.
காரைதீவு நிருபர்-
0 facebook-blogger:
கருத்துரையிடுக