(அமிர்தகழி நிருபர் )
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர்களின் 51 வது சங்க மகாநாடு மட்டக்களப்பு பேடினன் மண்டபத்தில் சங்க தலைவர் ஏ.எல் . பசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இந்த மகாநாட்டில் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் ,2015 ஆண்டுக்கான ஐக்கிய கிராம உத்தியோகத்தர்களின் புதிய நிர்வாக சபை தெரிவு கூட்டமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ ,எஸ் .எம் .சாள்ஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்களின் சிறப்புரையில் கிராம உத்தியோகத்தர்களின் கடமைப்பொறுப்புக்கள் தொடர்பான கிராம அலுவலர் அதிகாரப் பிரதேசத்திற்கு சட்டம் மற்றும் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக குற்றவியல் நடவடிக்கை முறை கோவையின் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயற்படுத்தும் சமாதான அலுவலராக செயற்படவேண்டும்.
அத்துடன் பல்வேறு சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் செயற்படுத்தும் அலுவலர் என்ற ரீதியில் தமது பிரிவிற்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் , பிரிவிற்குள் வாழ்கின்ற மக்களது பொருளாதார ,சமூக .கலாச்சார தொடர்பான தகவல்களைச் சேகரித்தலும் ,அத்தகல்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவ்வத்துரைகளது அபிவிருத்தித் தேவைப்பாடுகளை இனங்கண்டு அத்தேவைகளை நிறைவேற்றுவதற்காக பிரதேச செயலாளரது மேற்பார்வையின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் அமைச்சுக்கள் ,திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டு பிரிவிற்குள் அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தல் மற்றும் சமூக நலனோம்பல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற அலுவலராக செயற்படுதல் அவசியம் என ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்ட கிராம சேவை உத்தியோகத்தர்களினால் கருத்துகள் பரிமாறப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர்களின் 51 வது சங்க மகாநாடு மட்டக்களப்பு பேடினன் மண்டபத்தில் சங்க தலைவர் ஏ.எல் . பசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இந்த மகாநாட்டில் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் ,2015 ஆண்டுக்கான ஐக்கிய கிராம உத்தியோகத்தர்களின் புதிய நிர்வாக சபை தெரிவு கூட்டமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ ,எஸ் .எம் .சாள்ஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்களின் சிறப்புரையில் கிராம உத்தியோகத்தர்களின் கடமைப்பொறுப்புக்கள் தொடர்பான கிராம அலுவலர் அதிகாரப் பிரதேசத்திற்கு சட்டம் மற்றும் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக குற்றவியல் நடவடிக்கை முறை கோவையின் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயற்படுத்தும் சமாதான அலுவலராக செயற்படவேண்டும்.
அத்துடன் பல்வேறு சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் செயற்படுத்தும் அலுவலர் என்ற ரீதியில் தமது பிரிவிற்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் , பிரிவிற்குள் வாழ்கின்ற மக்களது பொருளாதார ,சமூக .கலாச்சார தொடர்பான தகவல்களைச் சேகரித்தலும் ,அத்தகல்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவ்வத்துரைகளது அபிவிருத்தித் தேவைப்பாடுகளை இனங்கண்டு அத்தேவைகளை நிறைவேற்றுவதற்காக பிரதேச செயலாளரது மேற்பார்வையின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் அமைச்சுக்கள் ,திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டு பிரிவிற்குள் அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தல் மற்றும் சமூக நலனோம்பல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற அலுவலராக செயற்படுதல் அவசியம் என ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்ட கிராம சேவை உத்தியோகத்தர்களினால் கருத்துகள் பரிமாறப்பட்டன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக