(மூலையூரான்)
எதிர்வரும் 13.14 ஜூன் 2015 ஆரம்பமாகவிருக்கும் கண்ணகி கலை இலக்கிய விழா தொடர்பான ஊ டகவியலாளர் சந்திப்பு ஒன்று 11.06.2015 மாலை 05.00மணியளவில் வந்தாறுமூலை விஷ்ணு மாக வித்தியாலய மண்டபத்தில் கண்ணகி கலை இலக்கிய விழாக்குழு தலைவர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தலைவர் உரையாற்றுகையில் கண்ணகி பாரம்பரிய கலைநிகழ்வுகளை எடுத்துக்கட்டும் முகமாக முதல் நாள் நிகழ்வு பண்பாட்டுப் பவனி காலை 06.30 மணியளவில் ஆரம்பமாகி பண்பாட்டுப் பவனியில் ஒரு அணி ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிள்ளையார் கோவிலிருந்து விழாக்குழு தலைவர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் தலைமையிலும் மற்றொரு அணி சித்தாண்டி முருகன் ஆலயத்தில் இருந்து விழாக்குழு துணைத்தலைவர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பொ.சிவகுரு தலைமையிலும் ஆரம்பித்து திருமலை வீதிவழியாக வந்து இரு அணிகளும் வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இணைந்து விழா மண்டபத்தை அடையும் என்றும் மேலும் தெரிவிக்கையில் கலை நிகழ்வானது அனைத்தும் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய விபுலானந்த மண்டபத்தில் மு. ப 09.00 மணி தொடக்கம் பி.ப 01.00 மணி வரையும் முதல்நாள் மாலை அமர்வாக பி.ப 03.00 மணி தொடக்கம் மாலை 08.00 மணிவரை இடம்பெறும் எனவும் மறு நாள் 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை காலை மு.ப 09.30 மணியளவில் ஆரம்பமாகி பி.ப 01.45 வரையும் இரண்டாம் நாள் மாலை பி.ப 03.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு இரவு 08.00 வரை இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டது இன் நிகழ்வில் கண்ணகி வரலாறு கண்ணகி பாரம்பரியங்கள் மற்றும் கண்ணகி கண்காட்சி வசந்தன் கூத்து போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகள் அனைத்தும் இதில் நிகழ்த்தப்படவுள்ளது என தெரிவித்தார்.
மேலும் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் கண்ணகி நிகழ்வானது தமிழர்களின் பாரம்பரியதும் இது இன்று மருவி போவதையும் நாம் பார்க்கலாம் இன்றைய காலத்தில் எமது கலாசாரம் சார்ந்து வாழ்பவர்கள் குறைந்து போவதையும் ஒழுக்க விழுமியங்கள் இல்லாமல் அருகுவதையும் பார்க்கலாம், வெறும் புத்தகப்படிப்பு மட்டும் ஒருவனை முழுமையாக்கி விடாது கலை இலக்கியங்கள் மக்களுடைய மனப்பாங்கை சீர்திருத்தக்கூடியவை தங்களுடைய வேலைப்பழு என்று இருக்காமல் இலக்கியங்களையும் கற்றுக்கொள்ளுதல் அதை வாழ்பவை போன்று முயற்சி செய்தல்வேண்டும் என்றும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் இதில் கண்ணகி கலை இலக்கிய கூடல் தலைவர் த. கோபாலகிருஷ்ணன் அவர்களும் கண்ணகி கலை இலக்கி விழா பொருளாளர் மு.மகேந்திரராஜா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக