வெள்ளி, 12 ஜூன், 2015

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய தீமிப்பு பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்மன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.


இலங்கையில் உள்ள அம்மன் ஆலயங்களுல் அதிகளவில் பக்தர்கள் தீமிதிப்பில் கலந்துகொள்ளும் ஆலயமாக புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயம் உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலும் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு ஆரம்பமானது.

ஆலயத்தி திருச்சடங்கு சிறப்பாக நடைபெற்றுவந்துடன் புதன்கிழமை அம்பாளை கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

உற்சவத்தின் இறுதியாக இன்று காலை அம்பாளுக்கு மற்றும் தீமிதிப்பில் கலந்துகொள்ளும் அடியார்களுக்கான காப்புகட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல் மட்டக்களப்பு வாவியில் அன்னையின் சமுத்திர நீராடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் அம்பாள் ஊர்வலமாக வந்து தீக்குளி காவல் செய்யப்பட்டு தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தீமிதிப்பு உற்சவத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்துகொண்டனர்.சிறுவர்கள்,வயோதிபர்கள் வேறுபாடின்று தீயில் இறங்கி தமது நேர்கடன்களை செலுத்தினர்.

இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.















































Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate