மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்டூர் பகுதியில் கடந்த 26ஆம் திகதி சமூக சேவைகள் உத்தியோகத்தர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் இதுவரையில் கொலையாளிகள் கைதுசெய்யப்படாததை கண்டித்தும் விரைவாக கொலையாளிகளை கைதுசெய்யக்கோரியும் மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடாத்தப்பட்டது.
இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு,காந்தி பூங்காவுக்கு முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடாத்தப்பட்டது.
முன்பாக காந்திப்பூங்காவில் கொலையினைக்கண்டித்தும் கொலையாளிகளை கைதுசெய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மாகாணசபை பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து காந்தி சதுக்கத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று அங்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
கடந்தவாரம் சமூகசேவைகள் உத்தியோகத்தர் படுகொலையின் சூத்திரதாரிகள் ஒரு வாரத்திற்குள் கைதுசெய்யப்படாவிட்டால் போராட்டம் நடாத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு,காந்தி பூங்காவுக்கு முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடாத்தப்பட்டது.
முன்பாக காந்திப்பூங்காவில் கொலையினைக்கண்டித்தும் கொலையாளிகளை கைதுசெய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மாகாணசபை பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து காந்தி சதுக்கத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று அங்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
கடந்தவாரம் சமூகசேவைகள் உத்தியோகத்தர் படுகொலையின் சூத்திரதாரிகள் ஒரு வாரத்திற்குள் கைதுசெய்யப்படாவிட்டால் போராட்டம் நடாத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக