தட்சண கைலாயம் என சிறப்புற்று விளங்கும் ஈழமணித் திருநாட்டின் மட்டக்களப்பின் மண்முனை தென்எருவில் பற்று பிரேதேச பிரிவில் தென்றல் தாலாட்ட தெம்மாங்கு பாட்டொலிக்க நெற்கதிர்கள் தலையசைக்க பாலோடு தேனும் பலவகைத் திரவியங்களோடு சிறப்புற்று விளங்கும் சீர்பதியாம் மகிழூர்முனை மண்டபத்தடியில் கோயில்கொண்டு அடியவர்களின் இடுக்கண் களைந்து இன்னல்களை நீக்கி இஷ்டசித்திகளை வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மண்டபத்தடி வலம்புரிநாதர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நவக்கிரகநாயகர்கள் மற்றும் வைரவர் ஆகிய பரீபார தெய்வங்களுக்கும் ஆவர்த்தன பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் நிகழும் மன்மதவருடம் வைகாசித்திங்கள் 24ம்நாள் ஞாயிற்றுக்கிழமை பஞ்சமித்திதியும் திருவோன நட்சத்திரமும், இடபலக்கினமும் அமிர்தசித்தயோகமும் கூடியகாலை 10.30 மணிதொடக்கம் 11.50 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹாகும்பாபிஷேக விழா சிறப்பாக இடம்பெற இருக்கிறது.
கிரியாகால நிகழ்வுகள் கர்மாரம்பம் 05.06.2015 வெள்ளிக்கிழமை, 06.06.2015 சனிக்கிழமை எண்ணெயக்காப்பும், 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் இடம்பெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து பன்னிருநாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்று 19.06.2015 வெள்ளிக்கிழமை சங்காபிஷேகம் இடம்பெற இருக்கிறது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக