வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று வாழ்வின் எழுச்சி பயனாளிகளுக்கான திரியசவிய கடன் உதவி வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.பிரதேச செயலளர் உ.உதயசிறிதர் தலைமையில் கடந்த சனிக்கிழமை (06) நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், வாழ்சின் எழுச்சி மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்ணம், மகாசங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.கணேசமூர்த்தி மற்றும் வலய முகாமையாளர்கள், கருத்திட்ட முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று வலயங்களில் 245 பேருக்கு 20.25 மில்லியன் ரூபா பெறுமதியான கடன் உதவி வழங்கப்பட்டது. ஆறுமுகத்தான் குடியிருப்பு வலயத்தில் 108 பேருக்கு 9.959 மில்லியன் ரூபா பெறுமதியான கடனும், மாவடிவேம்பு வலயத்தில் 57 பேருக்கு 5.49 மில்லியன் ரூபா பெறுமதியான கடனும், கரடியனாறு வலயத்தில் 80 பேருக்கு 5.16 மில்லியன் ரூபா பெறுமதியான கடன் உதவிகளும் வழங்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக