2016ஆம் ஆண்டில் அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்படிவங்கள் நாளை (10) வௌியிடப்படவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.தமது பிள்ளைகளை அனுமதிக்க விரும்பும் பெற்றோர் சட்டரீதியான பாதுகாவலர்கள் இவ்வறிவித்தலில் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு ஏற்பவும் தயார் செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமக்குப் பொருத்தமான பாடசாலைகளின் அதிபர்களுக்கு 2015 ஜுலை 10ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ள விரும்புவோர் கீழேயுள்ள 'தரவிறக்கம்' எனும் சொல்லினை கிளிக் செய்வதன் மூலம் இங்கு இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக