புதன், 10 ஜூன், 2015

வெலிக்காகண்டி பகுதியில் யானை தாக்குதலில் மேலும் ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வெலிக்காகண்டி பகுதியில் யானையின் தாக்குதல் காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இன்று பிற்பகல் 2.00மணியளவில் வெலிக்காகண்டிகுளத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மண்டூர்,சங்கர்புரத்தினை சேர்ந்த வீரக்குட்டி தியாகராஜா(45வயது)என்பவரே உயிரிழந்ததாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் மண்டூரில் இருந்து மாடுகளை கொண்டுசென்று இப்பகுதியில் மேய்ச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று இரவு சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,சடலத்தினை பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இன்று அதிகாலையும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குழுவினமடு பகுதியிலும் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate