கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சரின் வாகனத் தொடரணி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று மாலை சுமார் 5 மணியளவில் புணானையில் நடைபெற்ற விபத்தில் கிரான் பிரதேசத்திற்கு செல்வதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்த ஒரு தாயும் ஆறு மாதக் குழந்தையும் படுகாயமடைந்திருப்பதுடன்,
முதலமைச்சரின் வாகனத் தொடரணியில் பயணம் செய்த மூன்று உத்தியோகத்தர்களும் படுகாயமடைந்திருந்த நிலையிலேயே இவ்வாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இடம்பெற்ற விபத்தில் புணானையைச் சேர்ந்த திருமதி சாமித்தம்பி சறோசா (வயது 35), சாமித்தம்பி டிலுஸ்க்கா (6 மாதம்) என்ற இருவரும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு- மட்டக்களப்பு வீதியால் பயணம் செய்த முதலமைச்சரின் வாகன தொடரணி புணானைப் பகுதியில் மிகவும் வேகமாக சென்ற சமயத்தில் ஒரு வாகனத்தின் டயர் வெடித்துள்ளது.இதன்காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பேரூந்து நிலையத்தில் காத்திருந்த குழந்தையும் தாயு மீதும் மோதியுள்ளனர்.இதனால் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த குறித்த தாயும் குழந்தையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
0 facebook-blogger:
கருத்துரையிடுக