மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கன்னன்குடா மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 13 ஆம் திகதி யாழ்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கடந்த நாட்களில் நாடு முழுவது பல ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இது வரை தண்டனை வழங்கப்படாததை கண்டித்து மட்டக்களப்பு மேற்கு கல்வி கன்னன்குடா மகா வித்தியாலய மாணவர்களும் ,ஆசிரியர்களும் இணைந்து பாடசாலை முன்றலில் மாணவி வித்தியாவுக்கு மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு , தமது கண்டனத்தை தெரிவித்துக்கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த மாணவர்களும் ,ஆசிரியர்களும் மாணவி வித்தியாவுக்கு நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்க விடயம் , அதேவேளை இது திட்டமிடப்பட்ட செயல் எனவே இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை இலங்கையில் இவ்வாறன சம்பவம் எதிர் காலத்தில் இடம்பெறாத வகையில் தண்டனை வழங்க வேண்டும் என ஆர்பாட்டத்தின் போது தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அத்தோடு கடந்த 08 ஆம் திகதி முதல் 12 திகதி வரை வித்தியா வாரமா இப்பாடசாலை உயர் தர மாணவர்களினால் அனுஸ்டிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 13 ஆம் திகதி யாழ்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கடந்த நாட்களில் நாடு முழுவது பல ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இது வரை தண்டனை வழங்கப்படாததை கண்டித்து மட்டக்களப்பு மேற்கு கல்வி கன்னன்குடா மகா வித்தியாலய மாணவர்களும் ,ஆசிரியர்களும் இணைந்து பாடசாலை முன்றலில் மாணவி வித்தியாவுக்கு மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு , தமது கண்டனத்தை தெரிவித்துக்கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த மாணவர்களும் ,ஆசிரியர்களும் மாணவி வித்தியாவுக்கு நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்க விடயம் , அதேவேளை இது திட்டமிடப்பட்ட செயல் எனவே இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை இலங்கையில் இவ்வாறன சம்பவம் எதிர் காலத்தில் இடம்பெறாத வகையில் தண்டனை வழங்க வேண்டும் என ஆர்பாட்டத்தின் போது தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அத்தோடு கடந்த 08 ஆம் திகதி முதல் 12 திகதி வரை வித்தியா வாரமா இப்பாடசாலை உயர் தர மாணவர்களினால் அனுஸ்டிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக