சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொடி வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதன் முதல் கொடி மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ளஸ்க்கு இன்று (01) காலை வழங்கப்பட்டது.
மாவட்ட திவிநெகும பிரதிப் பணிப்பாளர் எம்.குணரெட்ணம் தலைமையில் இன்றைய தினம் இந்தக் கொடிதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது, மாவட்ட திவிநெகும திணைக்கள அலுவலகத்தின் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டனர். அதனையடுத்து திவிநெகும திணைக்களம் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கும் கொடிகள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் புகைத்தல் மற்றும் மது ஒழிப்புக்கான பல்வேறு விழிப்புணர்வூட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது, மாவட்ட திவிநெகும திணைக்கள அலுவலகத்தின் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டனர். அதனையடுத்து திவிநெகும திணைக்களம் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கும் கொடிகள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் புகைத்தல் மற்றும் மது ஒழிப்புக்கான பல்வேறு விழிப்புணர்வூட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக