(வா.கிருஸ்ணகுமார்)
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (26ஆம் திகதி) கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
இலங்கையில் தொன்மைமிக்க கண்ணகியம்மன் ஆலயங்களில் முதல் ஆலயமாக வீரமுனை கண்ணகியம்மன் ஆலயம் விளங்குவதாக கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன.
26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியுள்ள ஆலய திருச்சடங்கில் தினமும் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் அம்பாள் ஊர்வலமும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஆலயத்தின் திருச்சடங்கு நடைபெற்றுவரும் வேளையில் இந்த ஆலயத்தின் வரலாற்றினையும் நோக்குவது மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதவேண்டியுள்ளது.
வீரமுனைக்கிராமமானது இலங்கையில் தமிழர்களின் வரலாறுகளுடன் முக்கிய இடத்தினைப்பெறுகின்றது.அத்துடன் சீர்பாதகுலம் என்னும் குல மக்கள் தோற்றம் பெற்ற தாய்மடியாகவும் வீரமுனை விளங்குகின்றது.
முன்னைய காலத்தில் வீரமுனைக்கிராமமானது மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைந்ததாகவே இருந்துவந்தது காலப்போக்கில் இரு மாவட்டங்களாக மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது அவை பிரிந்துசென்றது.
உலகப்பிரசித்திபெற்ற மட்டக்களப்பு வாவியின் முடிவிடமாகவும் வீரமுனைக்கிராமம் திகழ்ந்துவருகின்றமை சிறப்பம்சமாகும்.
இத்தனை சிறப்புமிக்க இந்த வீரமுனைக்கிராமத்தில் கண்ணகி வழிபாடு இலங்கையில் கஜபாகு மன்னன் ஆட்சி செய்த காலத்தில் ஏற்பட்டதாக சில வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் சேர மன்னன் பரம்பரையில் ஆட்சி செய்தி சேரன் செங்குட்டுவன் என்பவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது அந்த விழாவில் இலங்கையில் இருந்து கஜபாகு மன்னனும் கலந்து சிறப்பித்ததாகவும் அதனைத்தொடர்ந்து அவன் நாட்டுக்கு வரும்போது ஏழு கண்ணகி சிலைகளை வழங்கியதாகவும் அவற்றில் முதன்முதலாக வீரமுனைக்கிராமத்திலேயே முதல் சிலையினை வழங்கி ஆலயம் அமைத்ததாகவும் அறியமுடிகின்றது.
அதன் பின்னரே இலங்கையின் பல பாகங்களுக்கும் கண்ணகி வழிபாடுகள் கொண்டுசென்றதாகவும் சில வரலாற்று தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
இவ்வாறு பழமை மிகு ஆலயமாகவுள்ள வீரமுனைக்கிராமத்தில் நடைபெறும் கண்ணகியம்மன் சடங்கு என்பது தமிழர்களின் பாரம்பரியங்களையும் பண்பாட்டினையும் கட்டிக்காக்கும் சடங்காக அமைவது மகிழ்வுக்குரிய விடயமாகும்.
குறிப்பாக பண்டைய காலம் தொட்டு ஆலய நிகழ்வுகள் ஆரம்பிக்கும் முன்னர் பட்டயம் அறிவிக்கும் நிகழ்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
எமது முன்னோர்கள் கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இடம்பெறும் வேளையில் கிராமத்தில் சில விடயங்களை (மா இடித்தல், வெள்ளை கட்டுதல், ,தீட்டு உடையவர்களை ஆலயத்துக்கு அண்மையிலிருந்து விலக்கி வைத்தல், மஞ்சள் இடித்தல், பெண்கள் தலை விரிகோலமாக செல்லல், பொரித்தல், மங்களகரமான நிகழ்வுகளை வீடுகளில் நடத்துதல்) செய்யாமையினை மரபாக கொண்டிருந்தனர்.
அவ் விடயங்களை உற்சவம் இடம்பெறுவதற்கு முன்னர் கிராமம் முழுவதும் சென்று மக்களுக்கு அறிவிப்பர்.
சமய மரபினை பேணுவோம் என்பதற்கிணங்க எமது முன்னோர்கள் கையாண்ட ஆலய உற்சவம் இடம்பெறும் வேளையில் செய்யத்தகாதவை இவையென மாட்டு வண்டியினூடாக கிராமம் முழுவதும் சென்று அறிவிக்கும் முறையினை இன்றும் இந்த கிராமத்தினர் கையாண்டுவருகின்றனர்.
இங்கு 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குடி முறையில் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தபோதிலும் காலப்போக்கில் அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.எனினும் குடி முறையில் பூஜைகளை செய்யும்போது ஒரு சமூகத்தின் வழக்கம் பாதுகாக்கப்படும் என்ற அபிப்பிராயங்களும் அண்மைக்காலமாக தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
இங்கு நடாத்தப்படும் பூஜை முறைகள் அனைத்தும் கிராமிய பண்பாடுகளையும் பண்டைய தமிழர்களின் பண்பாடுகளையும் கொண்டதாகவே இருந்துவருகின்றது.
இவ்வாறான நிலையில் இந்த ஆண்டும் உற்சவத்தினை சிறப்பாக நடாத்தும் வகையிலான நடவடிக்கைகளை ஆலய பரிபாலன சபையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த உற்சவத்தில் இன்று திங்கட்கிழமை 01ஆம் திகதி அதிகாலை கண்ணகியம்மனின் திருக்கல்யான நிகழ்வு நடைபெற்றதுடன் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெறும் திருக்குளிர்த்தியுடன் உற்சவம் இனிநிறைவுபெறும்.
ஆலயத்தின் இந்த உற்சவத்தினை ஆலயத்தின் பிரதமகுரு இரா.அரசரெட்னம் நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (26ஆம் திகதி) கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
இலங்கையில் தொன்மைமிக்க கண்ணகியம்மன் ஆலயங்களில் முதல் ஆலயமாக வீரமுனை கண்ணகியம்மன் ஆலயம் விளங்குவதாக கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன.
26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியுள்ள ஆலய திருச்சடங்கில் தினமும் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் அம்பாள் ஊர்வலமும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஆலயத்தின் திருச்சடங்கு நடைபெற்றுவரும் வேளையில் இந்த ஆலயத்தின் வரலாற்றினையும் நோக்குவது மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதவேண்டியுள்ளது.
வீரமுனைக்கிராமமானது இலங்கையில் தமிழர்களின் வரலாறுகளுடன் முக்கிய இடத்தினைப்பெறுகின்றது.அத்துடன் சீர்பாதகுலம் என்னும் குல மக்கள் தோற்றம் பெற்ற தாய்மடியாகவும் வீரமுனை விளங்குகின்றது.
முன்னைய காலத்தில் வீரமுனைக்கிராமமானது மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைந்ததாகவே இருந்துவந்தது காலப்போக்கில் இரு மாவட்டங்களாக மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது அவை பிரிந்துசென்றது.
உலகப்பிரசித்திபெற்ற மட்டக்களப்பு வாவியின் முடிவிடமாகவும் வீரமுனைக்கிராமம் திகழ்ந்துவருகின்றமை சிறப்பம்சமாகும்.
இத்தனை சிறப்புமிக்க இந்த வீரமுனைக்கிராமத்தில் கண்ணகி வழிபாடு இலங்கையில் கஜபாகு மன்னன் ஆட்சி செய்த காலத்தில் ஏற்பட்டதாக சில வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் சேர மன்னன் பரம்பரையில் ஆட்சி செய்தி சேரன் செங்குட்டுவன் என்பவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது அந்த விழாவில் இலங்கையில் இருந்து கஜபாகு மன்னனும் கலந்து சிறப்பித்ததாகவும் அதனைத்தொடர்ந்து அவன் நாட்டுக்கு வரும்போது ஏழு கண்ணகி சிலைகளை வழங்கியதாகவும் அவற்றில் முதன்முதலாக வீரமுனைக்கிராமத்திலேயே முதல் சிலையினை வழங்கி ஆலயம் அமைத்ததாகவும் அறியமுடிகின்றது.
அதன் பின்னரே இலங்கையின் பல பாகங்களுக்கும் கண்ணகி வழிபாடுகள் கொண்டுசென்றதாகவும் சில வரலாற்று தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
இவ்வாறு பழமை மிகு ஆலயமாகவுள்ள வீரமுனைக்கிராமத்தில் நடைபெறும் கண்ணகியம்மன் சடங்கு என்பது தமிழர்களின் பாரம்பரியங்களையும் பண்பாட்டினையும் கட்டிக்காக்கும் சடங்காக அமைவது மகிழ்வுக்குரிய விடயமாகும்.
குறிப்பாக பண்டைய காலம் தொட்டு ஆலய நிகழ்வுகள் ஆரம்பிக்கும் முன்னர் பட்டயம் அறிவிக்கும் நிகழ்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
எமது முன்னோர்கள் கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இடம்பெறும் வேளையில் கிராமத்தில் சில விடயங்களை (மா இடித்தல், வெள்ளை கட்டுதல், ,தீட்டு உடையவர்களை ஆலயத்துக்கு அண்மையிலிருந்து விலக்கி வைத்தல், மஞ்சள் இடித்தல், பெண்கள் தலை விரிகோலமாக செல்லல், பொரித்தல், மங்களகரமான நிகழ்வுகளை வீடுகளில் நடத்துதல்) செய்யாமையினை மரபாக கொண்டிருந்தனர்.
அவ் விடயங்களை உற்சவம் இடம்பெறுவதற்கு முன்னர் கிராமம் முழுவதும் சென்று மக்களுக்கு அறிவிப்பர்.
சமய மரபினை பேணுவோம் என்பதற்கிணங்க எமது முன்னோர்கள் கையாண்ட ஆலய உற்சவம் இடம்பெறும் வேளையில் செய்யத்தகாதவை இவையென மாட்டு வண்டியினூடாக கிராமம் முழுவதும் சென்று அறிவிக்கும் முறையினை இன்றும் இந்த கிராமத்தினர் கையாண்டுவருகின்றனர்.
இங்கு 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குடி முறையில் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தபோதிலும் காலப்போக்கில் அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.எனினும் குடி முறையில் பூஜைகளை செய்யும்போது ஒரு சமூகத்தின் வழக்கம் பாதுகாக்கப்படும் என்ற அபிப்பிராயங்களும் அண்மைக்காலமாக தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
இங்கு நடாத்தப்படும் பூஜை முறைகள் அனைத்தும் கிராமிய பண்பாடுகளையும் பண்டைய தமிழர்களின் பண்பாடுகளையும் கொண்டதாகவே இருந்துவருகின்றது.
இவ்வாறான நிலையில் இந்த ஆண்டும் உற்சவத்தினை சிறப்பாக நடாத்தும் வகையிலான நடவடிக்கைகளை ஆலய பரிபாலன சபையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த உற்சவத்தில் இன்று திங்கட்கிழமை 01ஆம் திகதி அதிகாலை கண்ணகியம்மனின் திருக்கல்யான நிகழ்வு நடைபெற்றதுடன் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெறும் திருக்குளிர்த்தியுடன் உற்சவம் இனிநிறைவுபெறும்.
ஆலயத்தின் இந்த உற்சவத்தினை ஆலயத்தின் பிரதமகுரு இரா.அரசரெட்னம் நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக