மட்டக்களப்பு கதிர்காமம் பாதயாத்திரிகர் சங்கத்தினரின் பாதயாத்திரை எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
இதுவரை காலமும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் யாத்திரை இம்முறை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
எதிர்வரும் 30ஆம் திகதி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஒன்றுசேரும் யாத்திரிகர்கள் வெருகல் ஆலயத்தில் தங்கி முதலாம் திகதி காலை புறப்பட்டு பனிச்சங்கேணி முருகன் ஆலயத்தைத் தரிசித்து அன்றிரவை மாங்கேணி பிள்ளையார் ஆலயத்தில் கழிப்பர். 2ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு வாழைச்சேனை பிள்ளையார் ஆலயத்தில் மதிய பூசையில் பங்குகொண்டு இரவு சந்திவெளி மரத்தடி பிள்ளையார் ஆலயத்தில் தங்குவர்.
3ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு நண்பகல் கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்தை அடைந்து இரவு திராய்மடு கடைச்சாமி ஆலயத்தில் தங்குவர்.
மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் அன்றைய பொழுதைக் கழிப்பர்.
5ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு கிரான்குளம் ஐயனார் ஆலயத்தை அடைந்து அன்றைய இரவை களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் கழிப்பர். களுதாவளையிலிருந்து 6ஆம் திகதி காலை புறப்பட்டு நண்பகல் கோட்டைக்கல்லாறு ஆலயத்தை தரிசித்து இரவு காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைவர். 7ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு அக்கரைப்பற்று கண்ணகி அம்மன் ஆலயம் வழியாக இரவு திருக்கோயில் முருகன் ஆலயத்தில் தங்குவர். 8ஆம் திகதி காலை திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு நண்பகல் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத்தை தரிசித்து இரவு கோமாரி முருகன் ஆலயத்தில் தங்குவர்.
9ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு மதியம் நாவலாறு பாலத்தை அடைந்து இரவை பாணமை பிள்ளையார் ஆலயத்தில் கழிப்பர்.
10ஆம் திகதி காலை அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு மதியம் சன்னாசி மலையில் தங்கி இரவு உகந்தைமலை முருகன் ஆலயத்தைச் சென்றடைவர்.
10ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு 11ஆம் திகதி வண்ணாத்திவெட்டையிலும், 12ஆம் திகதி குமுக்கன் ஆற்றிலும், 13ஆம் திகதி நாவலடிமடுவிலும், 14ஆம் திகதி யாலவிலும், 15ஆம் திகதி யால பாலத்திலும், 16ஆம் திகதி வள்ளியம்மன் ஆற்றிலும், இரவு வேளைகளில் தங்கி 17ஆம் திகதி இரவு கதிர்காமம் முருகன் சந்நிதியை அடைவர். 18ஆம் திகதி செல்லக் கதிர்காமம் செல்வர்.
இதுவரை காலமும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் யாத்திரை இம்முறை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
எதிர்வரும் 30ஆம் திகதி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஒன்றுசேரும் யாத்திரிகர்கள் வெருகல் ஆலயத்தில் தங்கி முதலாம் திகதி காலை புறப்பட்டு பனிச்சங்கேணி முருகன் ஆலயத்தைத் தரிசித்து அன்றிரவை மாங்கேணி பிள்ளையார் ஆலயத்தில் கழிப்பர். 2ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு வாழைச்சேனை பிள்ளையார் ஆலயத்தில் மதிய பூசையில் பங்குகொண்டு இரவு சந்திவெளி மரத்தடி பிள்ளையார் ஆலயத்தில் தங்குவர்.
3ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு நண்பகல் கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்தை அடைந்து இரவு திராய்மடு கடைச்சாமி ஆலயத்தில் தங்குவர்.
மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் அன்றைய பொழுதைக் கழிப்பர்.
5ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு கிரான்குளம் ஐயனார் ஆலயத்தை அடைந்து அன்றைய இரவை களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் கழிப்பர். களுதாவளையிலிருந்து 6ஆம் திகதி காலை புறப்பட்டு நண்பகல் கோட்டைக்கல்லாறு ஆலயத்தை தரிசித்து இரவு காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைவர். 7ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு அக்கரைப்பற்று கண்ணகி அம்மன் ஆலயம் வழியாக இரவு திருக்கோயில் முருகன் ஆலயத்தில் தங்குவர். 8ஆம் திகதி காலை திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு நண்பகல் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத்தை தரிசித்து இரவு கோமாரி முருகன் ஆலயத்தில் தங்குவர்.
9ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு மதியம் நாவலாறு பாலத்தை அடைந்து இரவை பாணமை பிள்ளையார் ஆலயத்தில் கழிப்பர்.
10ஆம் திகதி காலை அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு மதியம் சன்னாசி மலையில் தங்கி இரவு உகந்தைமலை முருகன் ஆலயத்தைச் சென்றடைவர்.
10ஆம் திகதி காலை அங்கிருந்து புறப்பட்டு 11ஆம் திகதி வண்ணாத்திவெட்டையிலும், 12ஆம் திகதி குமுக்கன் ஆற்றிலும், 13ஆம் திகதி நாவலடிமடுவிலும், 14ஆம் திகதி யாலவிலும், 15ஆம் திகதி யால பாலத்திலும், 16ஆம் திகதி வள்ளியம்மன் ஆற்றிலும், இரவு வேளைகளில் தங்கி 17ஆம் திகதி இரவு கதிர்காமம் முருகன் சந்நிதியை அடைவர். 18ஆம் திகதி செல்லக் கதிர்காமம் செல்வர்.
பாத யாத்திரியின் போது வழமையான நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மேற்படி ஒழுங்குகளில் தவிர்க்க முடியாத வேளைகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் பிரஸ்தாப சங்கத்தலைவர் எஸ்.தில்லைநாதன் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக