வெள்ளி, 12 ஜூன், 2015

மட்­டக்­க­ளப்பு கதிர்­காமம் பாத­யாத்­தி­ரிகர் சங்­கத்­தி­னரின் பாத­யாத்­திரை

மட்­டக்­க­ளப்பு கதிர்­காமம் பாத­யாத்­தி­ரிகர் சங்­கத்­தி­னரின் பாத­யாத்­திரை எதிர்­வரும் 30ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.


இது­வரை காலமும் யாழ்ப்­பாணம் செல்­வச்­சந்­நிதி முருகன் ஆல­யத்தில் இருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட இவர்­களின் யாத்­திரை இம்­முறை வெருகல் சித்­தி­ர­வே­லா­யுத சுவாமி ஆல­யத்தில் இருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.

எதிர்­வரும் 30ஆம் திகதி மாமாங்­கேஸ்­வரர் ஆல­யத்தில் ஒன்றுசேரும் யாத்­தி­ரி­கர்கள் வெருகல் ஆல­யத்தில் தங்கி முதலாம் திகதி காலை புறப்­பட்டு பனிச்­சங்­கேணி முருகன் ஆல­யத்தைத் தரி­சித்து அன்­றி­ரவை மாங்­கேணி பிள்­ளையார் ஆல­யத்தில் கழிப்பர். 2ஆம் திகதி காலை அங்­கி­ருந்து புறப்­பட்டு வாழைச்­சேனை பிள்­ளையார் ஆல­யத்தில் மதிய பூசையில் பங்குகொண்டு இரவு சந்­தி­வெளி மரத்­த­டி பிள்­ளையார் ஆல­யத்தில் தங்­குவர்.
3ஆம் திகதி காலை அங்­கி­ருந்து புறப்­பட்டு நண்­பகல் கொம்­மா­துறை பிள்­ளையார் ஆல­யத்தை அடைந்து இரவு திராய்­மடு கடைச்­சாமி ஆல­யத்தில் தங்­குவர்.

மறுநாள் காலை அங்­கி­ருந்து புறப்­பட்டு அமிர்­த­கழி மாமாங்­கப் ­பிள்­ளையார் ஆல­யத்தில் அன்­றைய பொழுதைக் கழிப்பர்.

5ஆம் திகதி காலை அங்­கி­ருந்து புறப்­பட்டு கிரான்­குளம் ஐயனார் ஆல­யத்தை அடைந்து அன்­றைய இரவை களு­தா­வளை பிள்­ளையார் ஆல­யத்தில் கழிப்பர். களு­தா­வ­ளை­யி­லி­ருந்து 6ஆம் திகதி காலை புறப்­பட்டு நண்­பகல் கோட்­டைக்­கல்­லாறு ஆல­யத்தை தரி­சித்து இரவு காரை­தீவு கண்­ணகி அம்மன் ஆல­யத்தை சென்­ற­டைவர். 7ஆம் திகதி காலை அங்­கி­ருந்து புறப்­பட்டு அக்­க­ரைப்­பற்று கண்­ணகி அம்மன் ஆலயம் வழி­யாக இரவு திருக்­கோயில் முருகன் ஆல­யத்தில் தங்­குவர். 8ஆம் திகதி காலை திருக்­கோ­விலில் இருந்து புறப்­பட்டு நண்­பகல் சங்­க­மன்­கண்டி பிள்­ளையார் ஆல­யத்தை தரி­சித்து இரவு கோமாரி முருகன் ஆல­யத்தில் தங்­குவர்.

9ஆம் திகதி காலை அங்­கி­ருந்து புறப்­பட்டு மதியம் நாவ­லாறு பாலத்தை அடைந்து இரவை பாணமை பிள்­ளையார் ஆல­யத்தில் கழிப்பர்.
10ஆம் திகதி காலை அவ்­வி­டத்தில் இருந்து புறப்­பட்டு மதியம் சன்­னாசி மலையில் தங்கி இரவு உகந்­தை­மலை முருகன் ஆல­யத்தைச் சென்­ற­டைவர்.
10ஆம் திகதி காலை அங்­கி­ருந்து புறப்­பட்டு 11ஆம் திகதி வண்­ணாத்­தி­வெட்­டை­யிலும், 12ஆம் திகதி குமுக்கன் ஆற்­றிலும், 13ஆம் திகதி நாவ­லடிமடு­விலும், 14ஆம் திகதி யாலவிலும், 15ஆம் திகதி யால பாலத்­திலும், 16ஆம் திகதி வள்­ளி­யம்மன் ஆற்­றிலும், இரவு வேளை­களில் தங்கி 17ஆம் திகதி இரவு கதிர்­காமம் முருகன் சந்­நிதியை அடைவர். 18ஆம் திகதி செல்லக்­ க­திர்­காமம் செல்வர்.



பாத யாத்திரியின் போது வழமையான நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மேற்படி ஒழுங்குகளில் தவிர்க்க முடியாத வேளைகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் பிரஸ்தாப சங்கத்தலைவர் எஸ்.தில்லைநாதன் தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate