செவ்வாய், 2 ஜூன், 2015

சமூக குறைபாடுகளே மாணவர்கள் சிறைச்சாலைக்கு செல்லும் நிலையினை ஏற்படுத்தியது – சிறைச்சாலை ஆணையாளர்

சமூகத்தில் இருக்கும் குறைபாடுகளே சிறைச்சாலைகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலையேற்படுகின்றது என மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஆணையாளர் ஏ.பிரியங்கர தெரிவித்தார்.


பாடசாலை மாணவர்கள் மத்தியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக மாற்றும் செயற்றிட்டங்கள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகளாக அல்லாமல் நல்ல தலைவர்களாக வாழும் முறை தொடர்பில் உயர் தர மாணவர்களை விழிப்புணர்வூட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மத்தியில் இருந்து சிறைச்சாலைக்கு செல்வோர் அதிகரித்துவரும் நிலையில் அந்த நிலைமையினை கட்டுப்படுத்தி சிறந்த நற்பிரஜைகளை உருவாக்கும் வகையில் இந்த விசேட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறைச்சாலை ஐக்கிய சங்கத்தின் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட பிராந்திய கிளை யூடாக இந்த நடவடிக்கை சிறைச்சாலை திணைக்களம் மற்றும் கல்வித்திணைக்களம் மூலம் நடாத்தப்பட்டுவருகின்றது.

இதன்கீழ் மட்;டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட புனித மைக்கேல் கல்லூரியின் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு இன்று கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை சிறைச்சாலை ஐக்கிய சங்கத்தின் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட பிராந்திய கிளையின் தலைவர் அருட்சகோதரர் தயாசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தின் சிறைச்சாலை நலன்புரிக்கான ஆணையாளர் கே.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,உதவி கல்வி பணிப்பாளர் ஜெயராஜ்,மற்றும் பாடசாலை அதிபர் டி.வாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate