புதன், 3 ஜூன், 2015

கிழக்கின் தொன்மையினை பேணி பாதுகாக்கும் ஆலயங்கள் -இன அழிப்பினையும் முறியடித்த ஆலயங்கள்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அழிக்கப்பட்டாலும் தமிழர்களின் வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டு அவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டாலும் அவர்களின் பண்பாடுகளையும் கலாசாரங்களையும் யாராலும் அழிக்கமுடியாத நிலையே உள்ளது.


இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் எழுச்சியை என்றும் காணமுடிகின்றது.

இதற்கு அடிகோலியாக இருப்பது கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமிய வழிபாடுகளைக்கொண்டுள்ள ஆலயங்கள் என்பது காலத்தால் அழியாத உண்மையாகும்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தி திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு காரணமாக தமிழர்களின் வீதம் மிகவும் குறைந்தளவில் உள்ள நிலையிலும் அப்பகுதிகளின் தமிழர்களின் பூர்வீகத்தினையும் வரலாற்றினையும் ஆலயங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் தொன்மையாகவுள்ள தமிழ் கிராமமான வீரமுனைக்கிராமம் கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் வரலாற்றுடன் ஒன்றுபட்டதாகவுள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள ஆலயங்களும் இந்த வரலாற்றினை பேணிவரும் நிலையில் இந்த கிராமத்தினையும் அழித்து தமிழர்களின் தடயங்களை இல்லாமல் செய்யும் பணிகள் கடந்த காலத்தில்மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.அதற்கு காரணமாக இருந்தது ஆலயங்களின் வரலாற்று தொன்மையாகும்.

இவ்வாறான நிலையில் வீரமுனையின் வரலாற்றினையும் கிழக்கு மாகாணத்தின் தொன்மையினையும் கொண்ட வீரமுனை கண்ணகியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு இன்று சிறப்பான முறையில் நிறைவுபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய கலாசாரங்களையும் கிராமிய பழமையினையும் தொடர்ச்சியாக பேணி இந்த உற்சவம் நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate