காரைதீவு பகுதியில் இன்று இரு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
காரைதீவு அக்கரைப்பற்று பிரதான பாதையில் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று பாதையைவிட்டு விலகி ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று காலை சம்பவித்துள்ளது. சாரதி சிறுகாயங்களுடன் தப்பியுள்ளார். அருகிலிருந்த மோட்டார் சைக்கிளுக்கும் லொறிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை காரைதீவு அம்பாறை பிரதான பாதையில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று பாதையைவிட்டு விலகி வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று அதிகாலை சம்பவித்துள்ளது. சாரதியின் தூக்கமே இவ்விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சாரதி சிறுகாயங்களுடன் தப்பியுள்ளார். லொறிக்கும் சேதம் ஏற்பட்டுள்
இச்சம்பவம் இன்று அதிகாலை சம்பவித்துள்ளது. சாரதியின் தூக்கமே இவ்விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சாரதி சிறுகாயங்களுடன் தப்பியுள்ளார். லொறிக்கும் சேதம் ஏற்பட்டுள்
0 facebook-blogger:
கருத்துரையிடுக