புதன், 10 ஜூன், 2015

நாவற்குடாவில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு -9வர்த்தகர்கள் மீது வழக்கு

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த உணவகங்கள்இ சிற்றுண்டி சாலைகள்இகொத்து ரொட்டி தயாரிப்பு மையங்கள் இன்று காலை சுகாதார அதிகரிகளினால் திடீர் சுறறிவெளைப்பிற்குட்படுத்தப்பட்டன.


மட்டக்களப்பு மாநகர சபையும், பொது சுகாதார வைத்தியதிகாரி பணிமனையும்  இணைந்து நாவற்குடா பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அரவிந்த் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களான எஸ்.அமுதமாலன் வா.ரமேஸ்குமார் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை கொண்;ட சுகாதார அதிகாரிகள் குழுவினர் இச்சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கையின்போது மனித பாவனைக்குதவாத பழுதடைந்த மற்றும் காலாவதியானஇ இலையான் மொய்த்தஇ பெருமளவு உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் 9 வர்த்தகர்கள்மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate